முதலமைச்சரின் பசுமை
வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து
தமிழ்நாடு அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது.
கிராமப்
பகுதிகளில் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை
மக்கள் பயன்பெறும் வகையில்
சூரிய சக்தியுடன் கூடிய
பசுமை வீடுகள் அரசால்
கட்டித்தரப்படுகிறது. தமிழ்நாடு
நிதி நிலை அறிக்கையில் 20,000 வீடுகள் கட்ட
அரசு மானியம் வழங்க
ரூ.499.227 கோடி
ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த
நிலையில் முதற்கட்டமாக ரூ.299
கோடி நிதி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பட்டியலின மக்களுக்கு தலா ரூ.1.1 லட்சம்
மானியத்தில் 11,197 வீடுகளும், பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.3
லட்சம் மானியத்தில் 8,803 வீடுகளும்
கட்டப்பட உள்ளன.அனைத்து
வீடுகளும் முறையாக கட்டப்படுவதை உறுதி செய்ய ஒவ்வொரு
நிலையில், அதை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி பின்
மானியத் தொகையை விடுவிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு
அரசு அறிவுறுத்தியுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


