தேர்வாணையத்தின் அனைத்து
அறிவிப்புகளும் தேர்வாணைய
இணையதளத்தில் மட்டுமே
வெளியிடப்படும் – TNPSC
TNPSC
Group 4 தேர்வு குறித்த
தவறான அறிவிப்பு சமூக
வலைதளங்களில் பரவுவதாகவும், அதை விண்ணப்பதாரர்கள் நம்ப
வேண்டாம் என்றும் TNPSC
செயலாளர் உமா மகேஸ்வரி
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group 4 தேர்வு குறித்த தவறான
அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை
விண்ணப்பதாரர்கள் கருத்தில்
கொள்ள வேண்டாம்.
தேர்வாணையத்தின் அனைத்து அறிவிப்புகளும் தேர்வாணைய
இணையதளத்தில் மட்டுமே
வெளியிடப்படும். TNPSC
Group 4 தேர்வுக்கான அறிவிப்பு
விரைவில் வெளியிடப்பட உள்ளது.
அதனை
www.tnpsc.gov.in என்ற
தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து
அறிந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.