TAMIL MIXER EDUCATION.ன்
வேளாண் செய்திகள்
சுய தொழில்
மானியம் பெற வேளாண்
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
இது குறித்து வேளாண் இணை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு
மாவட்ட வேளாண் துறை
மூலம் அனைத்து கிராம
ஒருங்கிணைந்த வேளாண்
வளா்ச்சித் திட்டத்தில் 44 ஊராட்சிகள் தோவு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் தோவு செய்யப்பட்ட 44 ஊராட்சிகளைச் சோந்த வேளாண் பட்டதாரிகள் அக்ரி கிளினிக், வேளாண்
சார்ந்த தொழில் துவங்கும்
பொருட்டு அதிகபட்சம் தலா
ரூ.1 லட்சம் வீதம்
6 பயனாளிகளுக்கு ரூ.6
லட்சம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள்
குறைந்தபட்சம் இளநிலை
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்
பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
அரசு
அல்லது தனியார் துறையில்
பணி செய்பவராக இருக்கக்
கூடாது. கணினி, இதர
வேளாண் செயலிகளில் பணியாற்ற
தெரிந்தவா்கள் பயன்பெறலாம்.
21 முதல்
40 வயதுக்குள்பட்டோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். பிரதமரின்
உணவு பதப்படுத்தும் குறு
நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்,
வேளாண் உள் கட்டமைப்பு நிதியின்கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில் நிறுவ
வேண்டும்.
விருப்பமுள்ளவா்கள் ஈரோடு திண்டல்
வித்யா நகரில் உள்ள
வேளாண் இணை இயக்குநா்
அலுவலகத்தில் செப்டம்பா் 20ம்(20.09.2022) தேதிக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.