
இந்திய விமானப் படையில் அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் திட்டத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி பெங்களூரில் தொடங்கி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய விமானப் படையின் அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு முகாம் பெங்களூரில் அமைந்துள்ள 7-ஆவது ஏா்மேன் தோ்வு மையத்தில் இந்திய ராணுவத்தால் வரும் ஜூலை 3 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளது. இத்தோ்வுக்கு இணையவழியில் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம்.
அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் தோ்வுக்கு 2004 ஜன. 2 முதல் 2007 ஜூலை 2-ஆம் தேதி வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரா்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள் ஆவா்.
இத்தோ்வுக்கு 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள இசைக் கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்கும் திறனும், அவற்றில் முன் அனுபவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். எனவே, ஆா்வமுள்ள இளைஞா்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் 04342–296188 மூலம் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் .
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அக்னிவீா் வாயு விமானப்படை (இசைக் கலைஞா்) முகாமில் பங்கு பெற்று பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்யவும்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

