பொதுத்தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை
10, 11 & 12ம்
வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல்
சலுகைகள் வழங்கி தேர்வுத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு மே
5ம் தேதி முதல்
28ம் தேதி வரை
பொதுத் தேர்வு நடைபெற
உள்ள நிலையில், 11ம்
வகுப்புக்கு மே 9ம்
தேதி முதல் 31ம்
தேதி வரை தேர்வுகள்
நடைபெறுகிறது.
அதேபோல
10ம் வகுப்புக்கு மே
6-ஆம் தேதி முதல்
30-ஆம் தேதி வரை
தேர்வு நடைபெறும் என்றும்
இதற்கான முடிவு ஜூன்
17ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல்
12ம் வகுப்பு தேர்வு
முடிவுகள் ஜூன் 23ம்
தேதியும், 11ம் வகுப்பு
தேர்வு முடிவுகள் ஜூலை
7ம் தேதி வெளியாகிறது. அத்துடன் 12ம் வகுப்பு
மற்றும் 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு ஏப்ரல்
25ம் தேதி முதல்
மே 2ம் தேதி
வரை செய்முறை தேர்வு
நடைபெறும் என்று அரசு
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
மாற்றுத்திறனாளிகள் சொல்வதை
எழுதுபவருக்கு கூடுதலாக
ஒரு மணி நேரம்
அவகாசம் மற்றும் மொழிப்பாட
விலக்கு உள்ளிட்ட சலுகைகள்
வழங்க முடிவு
பத்தாம் வகுப்பில்
அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும்
மாணவர்களுக்கு விலக்க
அனுமதி
11ம் வகுப்பு
மற்றும் 12 ம் வகுப்பு
பயிலும் மாணவர்கள் செய்முறைத் தேர்வில் பொது ஆய்வக
உதவியாளர் பணி அமர்த்திக் கொள்ள அனுமதி
மாற்றுத்திறன் தேர்வர்கள் தளத்திலேயே தேர்வு எழுத
வசதிகள் தேர்வு கட்டணம்
செலுத்துவதிலிருந்து விலக்கு
உள்ளிட்ட சலுகைகளுக்கு கூடுதலாக
அனுமதி
தேர்வு ஈடுசெய்
நேரம் ,வினாத்தாள் வாசிப்பாளர், சொல்வதை எழுதுபவர் , ஆய்வக
உதவியாளர் நியமனம் குறித்து
அரசாணை
தேர்வுத் துறையின்
புதிய உத்தரவுகளை மத்திய
கல்வி வாரியத்தின் சலுகைகளை
பின்பற்ற மாநில தேர்வு
துறை முடிவெடுத்துள்ளது
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


