மனைவி பெயரில் கடன் வங்கியவர்களுக்கு ஒரு நற்செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான அங்கம். திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து பல பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். எனவே, திருமணத்திற்குப் பிறகு உங்கள் மனைவிக்கான சலுகைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணுக்கு எத்தனை ஆசைகள் இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு அதை கணவன் மூலம் நிறைவேற்றுபவர்கள் ஏராளம். திருமணமான பெண் படிக்க வேண்டும் என்றால், அதற்கு பணம் வேண்டும். இதற்காக கல்விக் கடன் வாங்கினால், அதில் பெரும் தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்கள் மனைவியின் உயர்கல்விக்கு நிதியளிக்க கல்விக் கடனைப் பெற்றிருந்தால், வட்டி செலுத்தத் தொடங்கும் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் வரை வட்டியைத் திருப்பிச் செலுத்தும் வரிச் சலுகையைப் பெறுவீர்கள்.
அதாவது இது வருமான வரி விதிகளின்படி, 80சி-யின்படி, இந்த வட்டிக்கு நீங்கள் 8 ஆண்டுகள் வரை வரி விலக்கு கோரலாம்.
தற்போது வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதால், பணத்தை நீண்ட காலத்தின் அடிப்படையில் கடன் வாங்கினால், வட்டி ஒரே மாதிரியாக இருக்கும்.
அதேநேரம் இந்த கல்விக்கடனை நீங்கள் பொதுத்துறை வங்கிகள் அல்லது அரசு அங்கீகரித்த நிதி நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்கியிருக்க வேண்டும்.
இது தொடர்பாக, வங்கி அதிகாரியை நேரில் சந்தித்து விபரம் பெறலாம். உங்கள் மனைவி பெயரில் கடன் வாங்கி அதிக லாபம் பெறலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

