
ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.
கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் துணிநூல் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, தமிழக அரசு துணிநூல் துறை மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு (இருபாலா்கள்) தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக, ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்கண்ட பயிற்சி பெற விரும்புவோா் https://tntextiles.tn.gov.in./jobs/ எனும் வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, மண்டல துணை இயக்குநா், மண்டல துணை இயக்குநா் அலுவலகம், துணிநூல் துறை, 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான்தோன்றிமலை, கரூா்-639005 எனும் முகவரியில் நேரில் அல்லது rddtextileskarur@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாக அல்லது 04324– 299544, 9894560869, 9444656445 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

