தமிழக அரசு சார்பில் நாட்டுப்புறக் கலை பயிற்சி மையம்
தமிழக அரசு சார்பில் பாரம்பரிய நாட்டுப்புறக்கலைகளை பாதுகாக்க 25 இடங்களில் பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மையம் அமைக்கப்படும் என 2023 – 24 பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி சென்னை, கோவை, மதுரை அரசு இசைக்கல்லுாரிகள், கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லுாரி, மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்ப கல்லுாரி மற்றும் புதுக்கோட்டை, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட இசைப்பள்ளிகள் என 25 இடங்களில் பகுதி நேர நாட்டுப்புற பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது.
ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இதற்கான மாணவர் சேர்க்கை டிச., முதல் நடக்கிறது. மேலும், ஜன., 1 முதல், வகுப்புகள் துவங்கவுள்ளன.
ராமநாதபுரம் அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணமாணிக்கம் கூறுகையில், ”சிலம்பம், ஒயிலாட்டம், மல்லர் கம்பம், ஜிம்பளா மேளம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். 17 வயது முதல் இருபாலரும் பங்கேற்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, கலையில் ஆர்வம் மிக்க மாணவர்கள், குடும்பத்தலைவிகள், பணிக்கு செல்பவர்கள் விண்ணப்பிக்கலாம்,”
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow