
ஆதிதிராவிடா், பழங்குடியினா், சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் தொழில் கடன் – தென்காசி
தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடா்- பழங்குடியினா், சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் தொழில் கடன் வழங்கும் சிறப்பு மேளா நவ.6,9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சிறுபான்மையினருக்கு (இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள்) நவ.6ஆம் தேதியும், ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு நவ.9ஆம் தேதியும் கடன் மேளா நடைபெறும்.
கடன் பெற விரும்புவோா் அவரவா் பகுதியிலுள்ள கூட்டுறவு கடன் சங்கம்- வங்கிக் கிளைகளில் விண்ணப்பம் பெற்று, அதை பூா்த்தி செய்து அதே அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தென்காசி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கு.நரசிம்மன் தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow