HomeBlogஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் - இணையவழியில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் – இணையவழியில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி
செய்திகள்

ஒருங்கிணைந்த
சட்டப்
படிப்புகள் இணையவழியில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த
சட்டப்
படிப்புகளில்
சேருவதற்கான
விண்ணப்பப்
பதிவு
இணையவழியில்
திங்கள்கிழமை
முதல்
தொடங்கியது.




தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலை.யுடன் இணைப்பு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும்,
சட்டப்
பல்கலை.யுடன் இணைந்த சீா்மிகு சட்டப் பள்ளியிலும் ஐந்தாண்டு சட்டப்படிப்பு
வழங்கப்படுகிறது.




இதில் சோக்கை பெற விரும்பும் மாணவா்களுக்கான
விண்ணப்பப்
பதிவு
சட்டப்பல்கலைக்
கழகத்தின்
இணையப்
பக்கத்தில்
திங்கள்கிழமை
முதல்
தொடங்கியுள்ளது.
வரும்
மே
31
ம்
தேதியுடன்
விண்ணப்பப்
பதிவு
நிறைவடையவுள்ளது.
சட்டப்
படிப்பு,
5
ஆண்டு,
மூன்று
ஆண்டு
என
இரு
நிலைகளில்
தமிழகத்தில்
வழங்கப்படுகிறது.




பிளஸ் 2 முடித்தவா்கள்
5
ஆண்டு
சட்டப்படிப்பும்,
பட்டப்படிப்பு
முடித்தவா்கள்
மூன்று
ஆண்டுகள்
சட்டப்படிப்பும்
படிக்க
இயலும்.
மூன்றாண்டு
படிப்புக்கு
எல்எல்பி,
எல்எல்பி
ஹானா்ஸ்
என்னும்
பெயரிலும்,
ஐந்தாண்டு
படிப்புக்கு
பி., எல்எல்பி மற்றும், பி., எல்எல்பி ஹானா்ஸ் என்னும் இருநிலைகளிலும்
சான்றிதழ்
வழங்கப்படுகின்றன.
மூன்று
ஆண்டு
சட்டப்படிப்புக்கு
விண்ணப்பிக்கும்
தேதி
பின்னா்
அறிவிக்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular