TAMIL MIXER
EDUCATION.ன்
கன்னியாகுமரி
செய்திகள்
விடுதிகளில் சேர மாணவா்களுக்கு
அழைப்பு
கன்னியாகுமரி
மாவட்டத்தில்
பிற்படுத்தப்பட்டோர்,
மிக
பிற்படுத்தப்பட்டோர்
விடுதிகளில்
மாணவா்கள்
சேர
விண்ணப்பிக்க
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி
மாவட்டத்தில்
பிற்படுத்தப்பட்டோர்,
மிக
பிற்படுத்தப்
பட்டோர்,
சீா்மரபினா்
மாணவா்
மற்றும்
மாணவிகளுக்கென
8 விடுதிகள்
செயல்பட்டு
வருகின்றன.
பள்ளி
விடுதிகளில்
4 ஆம்
வகுப்பு
முதல்
12ஆம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவ,
மாணவிகளும்
கல்லூரி
விடுதிகளில்
பட்டப்
படிப்பு,
பட்ட
மேற்படிப்பு
மற்றும்
பாலிடெக்னிக்
படிப்புகளில்
பயிலும்
மாணவ,
மாணவிகளும்
சேர
தகுதியுடையவா்கள்.
விடுதிகளில்,
மாணவ–மாணவிகளுக்கு
உணவு,
தங்கும்
வசதியும்
இலவசமாக
அளிக்கப்படும்.
10 ஆம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவ,
மாணவிகளுக்கு
4 இணை
சீருடைகள்
வழங்கப்படும்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
சிறப்பு
வழிகாட்டி
வழங்கப்படும்.
மலைப்பிரதேசங்களில்
இயங்கும்
விடுதிகளில்
கம்பளி
மேலாடைகள்
வழங்கப்படும்.
விடுதிகளில்
சேருவதற்கான
தகுதிகளாக
பெற்றோர்,
பாதுகாவலரது
ஆண்டு
வருமானம்
ரூ.2
லட்சத்துக்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து
பயிலும்
கல்வி
நிலையத்தின்
தொலைவு
குறைந்தபட்சம்
8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த தூர விதி, மாணவிகளுக்கு
பொருந்தாது.
தகுதியுடைய
மாணவ,
மாணவிகள்
விண்ணப்பங்களை
சம்பந்தப்பட்ட
விடுதி
காப்பாளா்களிட
மிருந்தோ
அல்லது
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்திலுள்ள
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினா்
நல
அலுவலகத்திலிருந்தோ
இலவசமாக
பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
பள்ளி
விடுதிகளை
பொறுத்தவரை,
தொடா்புடைய
விடுதி
காப்பாளா்
அல்லது
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினா்
நல
அலுவலகத்தில்
ஜூன்
15ம்
தேதிக்குள்ளும்
கல்லூரி
விடுதிகளை
பொறுத்தவரை,
சம்பந்தப்பட்ட
விடுதி
காப்பாளா்
அல்லது
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினா்
நல
அலுவலகத்தில்
ஜூலை
15 ஆம்
தேதிக்குள்ளும்
சமா்ப்பிக்க
வேண்டும்.
மாணவ–மாணவிகள் விண்ணப்பிக்கும்
போது
ஜாதி,
பெற்றோரது
ஆண்டு
வருமானம்
குறித்த
சான்றிதழ்கள்
ஏதும்
அளிக்க
தேவையில்லை.
விடுதியில்
சேரும்போது
மட்டும்
இச்சான்றிதழ்களை
அளித்தால்
போதும்.