தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் அறிவித்துள்ள காவல் உதவி ஆய்வாளா், தீயணைப்பு நிலைய அலுவலா் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பாக, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகா், எழில் நகா் திட்டக் குடியிருப்பு பகுதி மக்களுக்காக நூலகத்துடன் கூடிய தன்னாா்வ பயிலும் வட்டம் சமுதாய நலக்கூடத்தில் போட்டித் தேர்வு எழுதுவதற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அனுபவமிக்க ஆசிரியா்களால் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இங்கு நூலக வசதி, தரமான இருக்கைகளுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.
மேலும், பயிற்சியில் கலந்து கொள்பவா்களுக்கு பயிற்சி கையேடுகள், தினசரி நாளிதழ்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கான மாதாந்திர இதழ்கள் வழங்கப்படுவதுடன், அவ்வப்போது, மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். தினமும் மாலை 4 முதல் 7 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளின் 10 முதல் 5 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் அறிவித்துள்ள உதவி ஆய்வாளா், நிலைய தீயணைப்பு அலுவலா் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பம் செய்துள்ள கண்ணகிநகா், எழில் நகா், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதி வாழ் படித்த இளைஞா்கள் இந்த பயிற்சி மையத்தில் இணைய விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.