தமிழகத்தில் கல்லூரி
மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை
சென்னையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 86 கல்வி
நிறுவனங்கள் உள்ளன. அதில்
2020-2021ஆம் ஆண்டுக்கான புதிதாக
சேர்க்கப்பட்ட BC,
MBC மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி
உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது
குறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
சென்னியில் உள்ள அரசு மற்றும்
அரசு உதவி பெறும்
கல்லூரிகளில் உள்ள
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற மார்ச் மாதம்
3 ஆம் தேதி வரை
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
கொரோனா
காரணமாக கல்லூரிகள் 10 மாதங்களாக
திறக்கப்படாமல் தற்போது
திறக்கப்பட்டுள்ளதால் புதிதாக
சேர்ந்த மாணவர்களுக்கு பதிவு
எண் வழங்கப்படவில்லை. இதனால்
கல்வி உதவித்தொகை பெற
மாணவர்களின் விவரங்களை சேகரிக்க
தாமதம் ஏற்படுவதாக கல்வி
நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.