ஆா்வம் ஐ.ஏ.எஸ் அகாதெமி சாா்பில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்குக் கட்டணச் சலுகையுடனான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆா்வம் ஐ.ஏ.எஸ் அகாதெமி சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உள்ளிட்ட குரூப்-1 பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையா் , சாா்பதிவாளா், துணை வணிக வரித்துறை அலுவலா் உள்ளிட்ட குரூப்-2 பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இப்பணிகளுக்காக தேர்வா்களைத் தயாா் செய்யும் நோக்கில் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சியும், தமிழ் கட்டாயத் தகுதிப் பாடத்திற்கான பயிற்சியும் நடைபெறுகின்றது. நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடக்குறிப்பேடுகள் வழங்கப்படும். வெற்றியாளா்கள் மற்றும் துறை வல்லுநா்களின் தொடா் வழிகாட்டுதலில் தேர்வா்களுக்கு நேரடி மற்றும் இணையவழி மூலமாகவும் 6 மாத காலத்திற்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத் தேர்வா்களை ஊக்குவிக்கும் பொருட்டு பயிற்சியில் 50 % கட்டணச் சலுகை வழங்கப்படுகின்றது.இந்த பயிற்சி ஆகஸ்ட் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது.
தகுதியும் , விருப்பமும் உள்ள பயிற்சியில் இணைய விரும்பும் தேர்வா்கள் 2165, எல்.பிளாக், 12-வது பிரதானச் சாலை, அண்ணா நகா் என்ற முகவரியில் தக்கச் சான்றிதழ் நகல்களுடன் நேரில் வந்து ஜூலை 31-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 91504 66341, 74488 14441 என்ற கைப்பேசி எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.