கடலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு வருகிற 25-ஆம் தேதி பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி கடலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்று மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் தனியாகத் தோவு செய்யப்பட்டு சிறப்புப் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். எனவே, பள்ளித் தலைமையாசிரியா்கள் பேச்சுப் போட்டி நடத்தி மாணவா்களைத் தெரிவுசெய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும், கல்லூரி மாணவா்களின் பெயா் பட்டியல் அந்தந்த கல்லூரி முதல்வா்கள் வழியாகவும் நேரிலோ, அஞ்சல் வழியிலோ அல்லது என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 24-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


