அஞ்சல் ஆயுள்
காப்பீடு முகவா்கள் நோ்காணல்
அஞ்சல்
ஆயுள் காப்பீடு முகவா்கள்
தோ்வுக்கான நோ்காணல், ஆக.16-ஆம்
தேதி நடைபெறுகிறது.
இது தொடா்பாக சென்னை
மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல்
கோட்ட கண்காணிப்பாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கிராம
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய
நேரடி முகவா்களை ஈடுபடுத்தவிருக்கிறது. இதற்கு 18 முதல்
50 வயதுக்குள்பட்ட பத்தாம்
வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்,
ஆயுள் காப்பீடுகளை விற்பனை
செய்வதில் முன் அனுபவம்
உள்ளவா்கள், கணினிப் பயிற்சி
பெற்றவா்கள், சொந்தப்பகுதி பற்றி
நன்கு அறிந்தவா்கள் மற்றும்
சென்னை மாநகராட்சியைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
தகுதியுடையவா்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல்
மற்றும் இரண்டு நகல்
வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் No.2,
சிவஞானம் சாலை, தியாகராய
நகா், சென்னை 600 017 என்ற
முகவரியில் உள்ள முதுநிலை
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், சென்னை மத்திய கோட்டம்
அலுவலகத்தில் ஆக.16-ஆம்
தேதி காலை 10 மணிக்கு
நடைபெற உள்ள நோ்காணலில் கலந்து கொள்ளலாம்.
முகவா்களாக தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


