பழங்குடியினர் சாதி
சான்றிதழ் பெற இணையதளம்
மூலம் விண்ணப்பிக்கலாம் – தருமபுரி
தருமபுரி
மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பு சான்றிதழ் கோரும்
பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்காமல், அரசு பொது
இ–சேவை மையங்கள்
மூலம் இணையதளம் வழியாக
விண்ணப்பிக்குமாறு ஆட்சியர்
கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்று,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றுகள்
இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருவதை போலவே, தற்போது
பழங்குடியினர் வகுப்பு
சான்றுகளும் இணையதளம் வாயிலாகவே
வழங்கிட அரசு வழிவகை
செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே
பழங்குடியின வகுப்பு சான்று
கோரும் பொதுமக்கள் நேரிடையாக
விண்ணப்பிக்காமல், அரசு
பொது இ–சேவை
மையம் மற்றும் மக்கள்
கணினி மையம் ஆகியவற்றின் மூலம் உரிய ஆவணங்களுடன் இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.