HomeBlogதமிழகத்தில் நவ.1-ல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை
- Advertisment -

தமிழகத்தில் நவ.1-ல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை

Kindergarten and nursery schools will not open in Tamil Nadu on November 1

தமிழகத்தில் நவ.1-ல்
மழலையர், நர்சரி பள்ளிகள்
திறப்பு இல்லை

கொரோனா
காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே முழுமையாகப் பள்ளிகள் திறக்கப்படாத சூழல் உருவானது. இந்தச்
சூழலில் தொற்றின் பரவல்
குறைந்ததால், 9 முதல் 12ம்
வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு
செய்தது. அதன்படி மாநிலம்
முழுவதும் உள்ள பள்ளிகள்
செப் 1ம் தேதி
முதல் மீண்டும் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல்
12
ம் வகுப்பு வரையான
மாணவர்களுக்கு மட்டும்
சுழற்சி முறையில் பாடங்கள்
நடத்தப்பட்டு வருகின்றன.
விருப்பம் உள்ள மாணவர்கள்
மட்டும் பள்ளிக்கு வந்தால்
போதும் என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனா
தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததால் 1 முதல் 8-ம்
வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து
பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வந்தது. இது தொடர்பாக
முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த
2
வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாததால் மன ரீதியாக
அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே.
அனைத்துப் பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட வேண்டும் என்று பலரும்
அறிவுறுத்தி வந்தனர். எனினும்
மூன்றாம் அலை அச்சம்
காரணமாக இந்த முடிவைத்
தமிழக அரசு தள்ளிவைத்தது. இந்த நிலையில், நவம்பர்
1-
ம் தேதி முதல்
1
முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி
வகுப்புகள் தொடங்கும் என்று
தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

மேலும்,
மழலையர்களுக்கான நர்சரி
பள்ளிகளும் நவம்பர் மாதம்
1
ம் தேதி முதல்
இயங்கும் என்று அரசுத்
தரப்பில் கூறப்பட்டது. இந்த
நிலையில் மழலையர்களுக்கான பள்ளிகள்
தற்போது திறக்கப்படாது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்:

தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளைத் திறக்கும் முடிவு தற்போதைக்கு இல்லை. மழலையர் பள்ளிகளைத் திறப்பது குறித்து பிறகு
முடிவெடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -