திருநங்கையருக்கு தமிழக
அரசு சார்பில் விருதுகள்
சொந்த
முயற்சியில் படித்து முன்னேறிய
திருநங்கையருக்கு, தமிழக
அரசு சார்பில், 2021 – 2022ம்
ஆண்டிற்கான முன்மாதிரி விருதுகள்
வழங்கப்படவுள்ளன.இதற்கு,
அரசு உதவி பெறாமல்,
தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறியிருக்க வேண்டும்.
குறைந்தது
ஐந்து திருநங்கையர் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.அதேபோல்,
திருநங்கையர் நல
வாரியத்தில் உறுப்பினராக இருத்தல்
கூடாது. இந்த தகுதியுள்ள திருநங்கையரின் விண்ணப்பங்கள் மட்டுமே, விருதுக்கு பரிந்துரைக்கப்படும்.தகுதியுள்ள திருநங்கையர், https://awards.tn.gov.in/
என்ற இணைதளத்தில் விண்ணப்பம் செய்து, உரிய ஆவணங்களுடன் கருத்துருவை, சென்னை கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள
மாவட்ட சமூகநல அலுவலகத்தில், வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

