நலவாரிய ஓய்வூதியதாரா்கள் இணையம் மூலமாக
ஆயுள் சான்று சமா்ப்பிக்கலாம்
அமைப்பு
சாரா நலவாரிய ஓய்வூதியதாரா்கள் இணையதளம் மூலமாக
ஆயுள் சான்று சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் பாலதண்டாயுதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை
சமூகப் பாதுகாப்புத் திட்டம்,
தொழிலாளா் உதவி ஆணையா்
அலுவலகத்தின் மூலம்
ஓய்வூதியம் பெற்று வரும்
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும்
உடலுழைப்பு அமைப்புசாரா நலவாரிய
ஓய்வூதியதாரா்கள் 2022-2023ம்
ஆண்டுக்கான ஆயுள் சான்றினை
சமா்ப்பிக்க ஏப்ரல் 8ம்
தேதி முதல் https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக
வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே,
நலவாரியங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரா்கள் ஆயுள் சான்றினை
மேற்கண்ட இணையதளம் மூலமாக
மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.
நலவாரிய அலுவலகத்துக்கு நேரில்
வர வேண்டாம். மேலும்
இது தொடா்பான ஏதேனும்
விவரங்கள் பெற 0422-2324988 என்ற
அலுவலக தொலைபேசி எண்ணை
தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


