நடமாடும் உழவர்
சந்தை விவசாயிகளுக்கு அழைப்பு
திருப்பூர்: மாநகராட்சி பகுதிகளில், அரசு மானியத்துடன், நடமாடும் உழவர் சந்தை
நடத்தவிரும்பும் விவசாயிகள் முன்வரலாம் என, வேளாண்
வணிகத்துறை அழைப்புவிடுத்துள்ளது.
மாநகராட்சி பகுதி மக்களுக்கு, நேரடியாக
காய்கறிகளை கொண்டு சென்று
விற்பனை செய்யும், நடமாடும்
உழவர் சந்தை திட்டத்தில், விவசாயிகள், காய்கறிகளை எடுத்து
சென்று, விற்க, இரண்டு
லட்சம் ரூபாய் வரை
மானிய உதவி வழங்கப்படுகிறது.
வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகள், தங்களிடம் உள்ள காய்கறிகளுடன், உழவர் சந்தைகளில் இருந்தும்,
காய்கறிகளை வாங்கி சென்று,
வார்டுக்குள் சென்று
விற்பனை செய்யலாம்.காய்கறி
விலை, பெட்ரோல் செலவுகளை
கணக்கிட்டு, உழவர் சந்தை
அலுவலரே, காய்கறி விலையை
நிர்ணயித்து வழங்குவார். படித்த,
இளம் விவசாயிகள், விண்ணப்பிக்கலாம்.
தங்கள்
பொறுப்பில், வாகனங்களை வாங்கி,
வியாபாரத்தை துவக்க வேண்டும்.
ஒரு மாத கால
செயல்பாடுகளை பார்த்து,
கள ஆய்வு நடத்தி,
பின்னேற்பு மானியமாக, இரண்டு
லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.திருப்பூர் மாநகராட்சியை சேர்ந்த,
இளம் விவசாயிகள், உழவர்
சந்தை அலுவலகங்களில், விண்ணப்பங்களை பெற்று, 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்