கரும்பு சாகுபடி
கடன் உச்சவரம்பு உயர்வு
கூட்டுறவு
வங்கிகளில், 10 ஏக்கர் வரை
கரும்பு சாகுபடிக்கு வழங்கப்படும் கடன் உச்சவரம்பு, 3 லட்சம்
ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
கூட்டுறவு
துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க
வேளாண் கூட்டுறவு கடன்
சங்கங்களில் வேளாண் சாகுபடிக்கு, 12 – 15 மாதங்களுக்கு உட்பட்ட
குறுகிய கால பயிர்
கடன்கள்
வழங்கப்படுகிறது.
அதன்படி,
சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம்
செய்துள்ள, பதிவு செய்த
கரும்பு விவசாயிகளுக்கு, 10 ஏக்கர்
வரை, கரும்பு பயிர்
சாகுபடிக்கு, 1.60 லட்சம் ரூபாய்
வரை கடன் வழங்கப்படுகிறது.
அந்த
உச்சவரம்பை தற்போது, 3 லட்சம்
ரூபாய் வரை உயர்த்தி,
கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
பயிர்
கடனுக்கு 7 சதவீதம் வட்டி
வசூலிக்கப்படுகிறது. குறித்த
காலத்திற்குள் கடனை
திருப்பி செலுத்தி விட்டால்,
வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.