பிஎம் கிசான்
திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2000
உதவித்தொகை: Apply @ pmkisan.gov.in
மத்திய
அரசு விவசாயிகளுக்கு உதவும்
வகையில் பிஎம் கிசான்
திட்டத்தை கடந்த 2018ம்
ஆண்டு டிசம்பர் மாதத்தில்
அறிமுகப்படுத்தியது.
இதுவரை
இத்திட்டத்தின் கீழ்
10 தவணை வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது
11வது தவணையை பெற
விவசாயிகள் காத்து கொண்டு
இருக்கின்றனர். இந்த
நிலையில் 11வது தவணை
எப்போது வழங்கப்படும் என்ற
தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய
அரசு விவசாயிகளின் நலன்
கருதி கடந்த 2018ம்
ஆண்டு டிசம்பர் மாதத்தில்
பிரதான் மந்திரி கிசான்
சம்மான் நிதி யோஜனா
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த
திட்டத்தின் படி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2000
வீதம் 4 மாதங்களுக்கு ஒரு
முறை என மொத்தமாக
ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த
உதவித்தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை
கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இதுவரை
இத்திட்டத்தின் கீழ்
பயனாளிகளுக்கு 10 தவணைகள்
வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 11வது தவணையை பெற
பயனாளிகள் காத்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் 11வது
தவணை பெற வேண்டுமெனில் அவர்கள் தங்களின் இகேஒய்சி
விவரங்களை சரிபார்க்க வேண்டும்
என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்
இதனை https://pmkisan.gov.in/
என்ற இணையதள முகவரி
மூலமாக சரிபார்க்க முடியும்.
இதில் ஏதேனும் தவறு
இருப்பின் உடனடியாக திருத்த
வேண்டும். அப்பொழுது தான்
11வது தவணை தொகையை
பெற முடியும்.
தங்களின்
இகேஒய்சி விவரங்கள் தவறாக
இருப்பின் 11வது தவணை
வழங்கப்பட மாட்டாது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
நிலையில் 11வது தவணை
வழங்குவது குறித்து அரசு
ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
மேலும் கடந்த ஆண்டு
மே 15ம் தேதியில்
தவணை தொகை வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும்
மே 14 மற்றும் 15ம்
தேதிகளில் 11வது தவணை
செலுத்த வாய்ப்பு உள்ளதாக
தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால்
அதற்குள் தங்களின் இகேஒய்சி
விவரங்களை சரிபார்த்து கொள்ள
வேண்டும். மேலும் இகேஒய்சி
விவரங்களை சரிபார்க்க மே
31ம் தேதி வரை
கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.