அங்கக வேளாண்
பயிற்சியில் பங்கேற்க அழைப்பு
வேளாண்
பல்கலை சார்பில் வழங்கப்படும், அங்கக வேளாண் பயிற்சியில் பங்கேற்க, விவசாயிகளுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.கோவை
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்
ஆராய்ச்சி மையம் சார்பில்,
நேரடியாக அங்கக வேளாண்
பயிற்சி நாளை, 7ம்
தேதி நடக்க உள்ளது.
காலை,
9.30 முதல், மதியம், 1.00 மணி
வரை மற்றும் மதியம்,
2.00 முதல் மாலை, 5.30 மணி
வரை நடைபெறும் பயிற்சியில், இயற்கை முறையில், பயிர்
சத்துக்கள் மேலாண்மை, களை
மேலாண்மை, இயற்கை உரம்,
பூச்சி விரட்டி தயாரித்தல், இயற்கை முறையில், பூச்சி
மற்றும் நோய் கட்டுப்பாடு அங்கக சான்றிதழ் பெறும்
வழிமுறைகள், பங்கேற்பாளர்களின் உறுதியளிப்பு திட்டம் ஆகிய தலைப்புகளில், பயிற்சி நடக்க உள்ளது.பயிற்சி
கட்டணமாக, 590 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
விபரங்களுக்கு, 0422 6611206,
2455055 ஆகிய எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.