TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
மானியத்தில் மின்
மோட்டார் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வேளாண்மை
பொறியியல் துறை சார்பில்
மானியத்தில் வழங்கப்படும் மின்
மோட்டார் திட்டத்தில் பயன்பெற
விரும்பும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்
பொறியியல் துறையின் மூலமாக,
விவசாயிகளின் நிலத்தடிநீரை பாசனத்திற்காக பெற
உதவும் வகையில் சிறு
மற்றும் குறு விவசாயிகளுக்கு (மூன்று ஏக்கா் வரை
நிலம் உள்ளவா்களுக்கு மட்டும்)
பழைய திறனற்ற மின்மோட்டார் பம்ப் செட்டுகளுக்குப் பதிலாக
புதிய மின்மோட்டார் பம்ப்
செட்டும் மற்றும் புதிய
மின் இணைப்பு வாங்குபவா்களுக்கு ‘மானியத்துடன் கூடிய
மின்மோட்டார் பம்ப்
செட்டுகள் வழங்கும் திட்டம்‘
செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், ஏற்கனவே மின் இணைப்பு
பெற்றுள்ள பழைய திறனற்ற
பம்ப் செட்டுகளை மாற்ற
விரும்புபவா்கள், தற்போதுள்ள டீசல் பம்ப் செட்டுக்களை மின் மோட்டார் பம்ப்
செட்டுக்கு மாற்ற விரும்புபவா்கள் (மின் இணைப்புகள் பெற்றுள்ளவா்களுக்கு மட்டும்), மின்
இணைப்பு பெற்ற விவசாயிகளால் புதிய ஆழ்துளை கிணறு
அமைத்து புதிய மின்மோட்டார் பெற விரும்பும் விவசாயிகள் தகுதியுடையோர் ஆவா்.
மின்மோட்டார்களை, தலைமைப்பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்க
வேண்டும்.
இதில்
10 எச்பி வரை மின்மோட்டார்கள் வாங்கிட 50 சதவீதம் மானியம்
அல்லது அதிகபட்சமாக ரூ.10,000
வரை மானியம் இதில்
எது குறைவோ அது
பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு
வைக்கப்படும்.
2022-2023ம்
ஆண்டிற்கு பொது பிரிவில்
32 பழைய மின்மோட்டார்களை மாற்றவும்,
7 புதிய மின்மோட்டார் மானியத்தில் வழங்கிடவும், ஆதிதிராவிட மற்றும்
பழங்குடியின விவசாயிகளுக்கு 2 புதிய
மின்மோட்டார் மானியத்தில் வழங்கிட மொத்தம் 41 எண்கள்,
ரூ.4.10 லட்சம் வழங்கிட
இலக்கு பெறப்பட்டுள்ளது. மேலும்
2021-2022 ஆண்டில் அனைத்து கிராம
வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தோவு செய்யப்பட்டுள்ள கிராம விவசாயிகளுக்கு முன்னரிமை
வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் தருமபுரி மாவட்ட விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா,
அடங்கல், நிலவரைபடம், சிறு
விவசாயிகளுக்கான சான்று,
(மூன்று ஏக்கா் வரை
மட்டும்) பாஸ் போர்ட்
அளவிலான புகைப்படம், விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண்
மற்றும் மின் இணைப்பு
அட்டை மற்றும் ஆதார்
அட்டை ஆகிய விவரங்களுடன் தருமபுரி மற்றும் அரூா்
வேளாண் பொறியியல் துறை
உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களை தொடா்பு கொண்டு பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


