TAMIL MIXER EDUCATION- ன் வேலைவாய்ப்பு செய்திகள்
அங்கன்வாடி மையத்தில்
கருணை அடிப்படை பணிக்கு
உத்தரவு
சத்துணவு,
அங்கன்வாடியில் பணியில்
இருக்கும் போது இறந்த
ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை
அடிப்படையில் பணி
நியமனம் வழங்கிட அரசு
உத்தரவிட்டுள்ளது.
சத்துணவு
திட்டத்தில் சமையலர், உதவியாளர்
பணியிடைக்காலத்தில் இறந்திருந்தால் அவர்களின்
பெண் வாரிசுகளுக்கு கருணை
அடிப்படையில் பணி
வழங்கலாம். அங்கன்வாடி மையத்தில்
உதவியாளராக பணிபுரிந்து பணியிடைக்காலத்தில் இறந்திருந்தால் அவர்களின்
பெண் வாரிசுதாரர்களுக்கு கருணை
அடிப்படையில் பணிநியமனம் வழங்கலாம்.
அஙகன்வாடி
பணியாளர் பெண் வாரிசுதாரரின் கல்வித்தகுதி, வயது
வரம்பு, வாரிசுரிமை, பிற
வாரிசுதாரர்கள் அரசுப்பணியில் இருப்பது போன்ற விவரங்களை
ஆய்வு செய்து அங்கன்வாடி பணிக்கான ஏனைய தகுதிகளை
நிறைவு செய்யும் பெண்
பணியாளர்களுக்கு கருணை
அடிப்படையில் அந்தந்த
கலெக்டர்கள் பணிநியமனம் வழங்கலாம்.
பணி
நியமனம் செய்யப்படும் போதுசத்துணவுத் துறையில் 2012ல் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ள துாரச்சுற்றளவு குறித்த நிபந்தனைகள் பின்பற்றவேண்டும்.
கருணை
அடிப்படையிலான பணி
நியமனங்களுக்கு துாரச்சுற்றளவு போன்ற தகுதிகளை வாரிசுதாரர்கள் பொருட்டு தளர்வு செய்யப்பட
வேண்டும் என்றால் அரசிடம்
முன் அனுமதி பெற்று
பணி நியமனம் வழங்கலாம்.