TAMIL MIXER EDUCATION-ன் ஓய்வூதியதாரர்களுக்கான செய்திகள்
ஓய்வூதியம் பெறுவோர்
வாழ்நாள் சான்று சமா்ப்பிக்க அறிவுறுத்தல் – ஈரோடு
ஓய்வூதியம் பெறுவோர் வாழ்நாள் சான்று
சமா்ப்பிக்க வேண்டும் என்று
மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு
ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப
ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு
ஆண்டும் ஜூலை மாதம்
முதல் செப்டம்பா் மாதத்துக்குள் நேர்காணலில் பங்கேற்று வாழ்நாள்
சான்று வழங்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனாவால்
நேர்காணல் நடைபெறவில்லை. இந்த
ஆண்டு வழக்கம்போல நேர்காணல்
நடக்க உள்ளது.
நேரடியாக
கருவூலத்துக்கு வருவதை
தவிர்த்து, ஜீவன் பிரமான்
இணையதளம் மூலம் மின்னணு
வாழ்நாள் சான்று சமா்ப்பிக்கலாம். அஞ்சல் துறை வங்கி
மூலம் இருப்பிடத்தில் இருந்தபடி
அஞ்சல் துறை பணியாளா்
மூலம் ரூ. 70 கட்டணம்
செலுத்தி, மின்னணு வாழ்நாள்
சான்று பதிவு செய்யலாம்.
இ–சேவை மையம்
மூலமும் சமா்ப்பிக்கலாம்.
ஓய்வூதியா்கள் சங்கத்தில் பயோமெட்ரிக் கருவி
மூலம் பங்கேற்கலாம். அவ்வாறு
சமா்ப்பிக்கும்போது, ஆதார்
கார்டு எண், பி.பி.ஓ.
எண், வங்கிக் கணக்கு
எண், ஓய்வூதியம் வழங்கும்
அலுவலக விவரத்தை பதிவுசெய்ய வேண்டும்.
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து,
ஓய்வூதியம் பெறும் கணக்கு
வைத்துள்ள வங்கி மேலாளா்,
அரசிதழ் பதிவு பெற்ற
மாநில, மத்திய அரசு
அலுவலா், வட்டாட்சியா், துணை
வட்டாட்சியா், வருவாய்
ஆய்வாளா் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்பலாம்.
வெளிநாட்டில் வசிப்போர் தூதரக அலுவலா்,
நீதித் துறை நடுவா்,
நேர்ட்டரி பப்ளிக் மூலம்
சான்று பெற்றும் அனுப்பலாம். கருவூலத்துக்கு நேரடியாக
வர விரும்புவோர் அலுவலக
வேலை நாள்களில் காலை
10 மணி முதல் பகல்
2 மணிக்குள் வந்தும் சமா்ப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


