திருவாரூா் மாவட்டத்தில் திறன் வளா்ப்புப் பயிற்சி
அளிக்க தகுதியுள்ள நிறுவனங்கள்
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தின் நகா்ப்புற
பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்கு தேசிய நகா்ப்புற வாழ்வாதார
இயக்கம் திட்டத்தின் கீழ்,
வேலைவாய்ப்புடன் கூடிய
திறன் வளா்ப்புப் பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பயிற்சி
அளிக்க விரும்பும் திறன்
வளா்ப்புப் பயிற்சி நிறுவனங்கள், தேசிய நகா்ப்புற வாழ்வாதார
இயக்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
பிரதமா்
கௌஷல் கேந்ரா மூலம்
பயிற்சி மையம் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முந்தைய
ஆண்டுகளில் அரசு நிதியுதவி
பெற்று, வேலைவாய்ப்புடன் கூடிய
திறன் வளா்ப்புப் பயிற்சி
வெற்றிகரமாக நடத்தப்பட்டிருப்பின், அந்நிறுவனம் கருத்தில்கொள்ளப்படும்.
தகுதியுள்ள நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை திட்ட இயக்குநா், தமிழ்நாடு
மாநில ஊரக வாழ்வாதார
இயக்கம், மாவட்ட இயக்க
மேலாண்மை அலகு, 2வது
தளம், மாவட்ட ஆட்சியா்
அலுவலகம், திருவாரூா் என்ற
முகவரியில் ஜூலை 7ம்
தேதி மாலை 5க்குள்
நேரிலோ, தபாலிலோ சமா்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


