TAMIL MIXER EDUCATION.ன்
குழந்தை தொழிலாளர் பற்றிய செய்திகள்
குழந்தை தொழிலாளர்
தொடர்பாக புதிய வழிகாட்டு
நெறிமுறைகள்
குழந்தை
உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய
ஆணையம் பொழுதுபோக்கு தொழில்துறை மற்றும் வணிக ரீதியான
பொழுதுபோக்கு செயல்பாடு
ஆகியவற்றில் குழந்தைகள் பங்கேற்பை
ஒழுங்குபடுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஊடக
வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தத்திற்கான ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையுடன் புதிய
சட்டங்கள், கொள்கைகள் குழந்தைகளின் நல்லார்வம் ஆகியவற்றை இணைத்து
இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை
குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் இணையதளத்தில் https://ncpcr.gov.in/ வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரைவு
வழிகாட்டு நெறிமுறைகள் மீது
பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன.
31.07.2022 வரை
கருத்துக்களை தெரிவிக்கலாம். முன்னதாக பொழுதுபோக்கு தொழில்துறையில் குழந்தைகள் பங்கேற்பை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2011ல் வெளியிடப்பட்டன.
இதன்
பிறகு சிறார் நீதி
(குழந்தைகளின் கவனிப்பு
மற்றும் பாதுகாப்பு) சட்டம்
2015, குழந்தை தொழிலாளர் திருத்த
சட்டம் 2016, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளின் பாதுகாப்பு (போக்சோ) சட்டம் 2012 போன்ற
புதிய சட்டங்கள் மற்றும்
விதிமுறைகள் இயற்றப்பட்டன என்ற
தகவலையும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here