TAMIL
MIXER EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
மாணவர்கள் நிரந்தர
மதிப்பெண் சான்றிதழை பெற்ற
பிறகு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு
செய்ய வேண்டும்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும்
12ம் வகுப்பில் தேர்ச்சி
பெற்ற மாணவர்களுக்கு அவரவர்
பயின்ற பள்ளிகளில் வேலை
வாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்தது.
ஆனால்
நடப்பு கல்வி ஆண்டில்
பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு
செய்யும் முறை ரத்து
செய்யப்படுவதாக அரசு
அண்மையில் அறிவித்தது.
அதனால்
பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் தங்களின் மதிப்பெண்
சான்றிதழ் உடன் வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது இ
சேவை மையத்திற்கு நேரில்
சென்று வேலை வாய்ப்பு
பதிவு மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில் பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் நிரந்தர மதிப்பெண்
சான்றிதழை பெற்ற பிறகு
மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண்
சான்றிதழ், ஜாதி சான்றிதழ்,ஆதார்
அட்டை மற்றும் குடும்ப
அட்டை உள்ளிட்ட அனைத்து
அசல் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில்
சென்று பதிவு செய்ய
வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனை
ஆன்லைன் முறையில் மேற்கொள்ள
விரும்பும் மாணவர்கள் www.tnvelaivaaipu.gov.in என்ன
பண்ற இணையதளத்தில் பதிவு
செய்யலாம்.மேலும் இ
சேவை மையம் மூலமாக
மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு பதிவுகள் மற்றும் கூடுதல்
பதிவுகள் உள்ளிட்ட பணிகளை
மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
எனவே
மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவை
முடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.