TAMIL MIXER
EDUCATION.ன்
Loan App செய்திகள்
இதை செய்தால் மோசடி கடன் செயலிகளின் தொல்லையை தவிர்க்க வேண்டுமா?
சட்டவிரோத டிஜிட்டல் கடன் செயலிகள் சம்பந்தப்பட்ட
நிதி
மோசடிகள்
அதிகரித்துக்
கொண்டே
வருகிறது.
ஈஸியாக கடன் வழங்குகிறோம்
என்று
கூறி
சில
ஆவணங்களை
மட்டுமே
பெற்றுக்
கொண்டு
கடன்
வழங்கும்
மோசடி
கடன்
செயலி
நிறுவனங்கள்,
அவர்களின்
வலையில்
வாடிக்கையாளர்களை
விழ
வைக்கின்றனர்.
இதில்
முக்கியமான
விஷயம்
என்னவென்றால்,
இத்தகைய
ஆன்லைன்
கடன்
செயலிகளில்
வட்டி
மிக
அதிகமாக
இருக்கும்.
இதனை
வாங்கும்
பெரும்பாலானோரால்
திருப்பிச்
செலுத்த
முடியவில்லை.
கடன் வாங்கியவர்கள்
ஒரீரு
தவணை
தவறினால்,
கடன்
வழங்கிய
செயலியை
நிறுவனத்தினர்
மிரட்டலை
அரம்பிக்கின்றனர்.
அடிக்கடி
போன்
செய்து
தொல்லை
கொடுப்பதுடன்,
தொடர்பில்
இருக்கும்
உறவினர்கள்
உள்ளிட்டோரின்
போன்
நம்பருக்கு
அழைப்பு
விடுத்து
மானபங்கம்
செய்யவும்
தவறுவதில்லை.
அவர்களின்
இத்தகைய
நடவடிக்கையால்
பலர்
தற்கொலை
செய்ய
வேண்டிய
நிலைக்கு
தள்ளப்படுகின்றனர்.
இது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கும்
சென்றுள்ளது.
இதனைத்
தொடர்ந்து
இதுபோன்ற
செயலிகள்
செயல்பட
அனுமதிக்கப்படும்
அனைத்து
சட்டப்பூர்வ
ஆன்லைன்
கடன்
பயன்பாடுகளின்
பாதுகாப்பான
பட்டியலைத்
தயாரிக்கவும்
திட்டமிட்டுள்ளது.
அதேநேரத்தில்
வாடிக்கையாளர்கள்
எப்பொழுதும்
எச்சரிக்கையுடன்
இருக்க
அறிவுறுத்ததியுள்ளது.
அதனால்
நீங்கள்
எந்த
மோசடியான
ஆன்லைன்
நிதி
தளத்திற்கும்
இரையாகிவிடக்கூடாது.
எந்தவொரு கடன் செயலியை பயன்படுத்துவதற்கு
முன்,
நிதி
மோசடிக்கும்
பலியாகாமல்
இருக்க
பின்வரும்
வழிமுறைகளை
கவனத்தில்
வைத்து
கொள்ளுங்கள்.
- சட்டவிரோத அப்ளிகேஷன்களை
நீங்கள்
நிறுவியவுடன்,
உங்கள்
தனிப்பட்ட
தரவுகளான
தொடர்பு
பட்டியல்,
புகைப்பட
தொகுப்பு
மற்றும்
கேமரா
போன்றவற்றிற்கான
அணுகலை
அவை
கோருகின்றன.
எனவே,
உங்கள்
தனிப்பட்ட
தரவின்
பாதுகாப்பு
மற்றும்
தனியுரிமையை
சமரசம்
செய்யக்கூடிய
பயன்பாடுகளை
எப்போதும்
தவிர்க்கவும். - ஏதேனும் கடன் பயன்பாட்டின்
நம்பகத்தன்மை
குறித்து
உங்களுக்கு
சந்தேகம்
இருந்தால்,
கடனைப்
பெற
எப்போதும்
தெரிந்த
வங்கி
அல்லது
நிதி
நிறுவனத்திற்குச்
செல்லவும்.
வங்கி
அல்லாத
நிதி
நிறுவனங்களின்
(NBFCs) பட்டியலை
RBI பராமரிக்கிறது,
அதில்
இருந்து
நீங்கள்
பாதுகாப்பாக
கடனைப்
பெறலாம்.