TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
தக்காளியை மதிப்பு கூட்டுப்பொருளாக
மாற்றி
விற்பனை
செய்யலாம்
தக்காளி அதிகம் விளையும் காலங்களில் விலை குறையும். அப்போது தக்காளியை கொட்டி அழிக்காமல், மதிப்பு கூட்டுப்பொருளாக
மாற்றி
விற்பனை
செய்யலாம்
என,
விவசாயிகளுக்கு
வேளாண்மை
துறை
அதிகாரிகள்
ஆலோசனை
வழங்கினர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு,மாரண்டஹள்ளியை
சுற்றி
உள்ள
பகுதிகளில்
ஏராளமான
விவசாயிகள்
தக்காளி
விவசாயத்தையே
பிரதான
தொழிலாளக
நம்பி
உள்ளனர்.
இங்கு அறுவடை செய்யும் தக்காளி தமிழக மட்டும் அல்லாமல், வெளி மாநிலங்களுக்கும்
விற்பனைக்கு
அனுப்படுகிறது.
இந்நிலையில்
இப்பகுதியில்
ஆந்திரா
மற்றும்
நாக்பூர்
தக்காளியும்
விற்பனைக்கு
வருகிறது.
உள்ளூரில்
தக்காளி
வரத்து
அதிகரிக்கும்
போது,
தக்காளி
விலை
கடுமையாக
குறைகிறது.
அறுவடை
செய்யும்
தக்காளியை
விவசாயிகள்
ஆற்றிலும்,
ஏரிகளிலும்
கொட்டும்
அவல
நிலை
ஏற்படுகிறது.
இதனால் தக்காளி விவசாயிகளுக்கு
பெரும்
இழப்பு
ஏற்படுகிறது.
இது
குறித்து
வேளாண்மை
துறை
அதிகாரிகள்
கூறியதாவது:தக்காளி வரத்து அதிகரிக்கும்
காலங்களில்,
தக்காளியை
கீழே
கொட்டி
அழிக்காமல்,
தக்காளி
ஜூஸ்
தொழிற்சாலை
அமைத்து
பயன்படுத்தலாம்.
இதற்காக பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும்
நிறுவனங்களை
முறைப்படுத்தும்
திட்டத்தில்,
மத்திய
அரசு,
60 சதவீதம்,
மாநில
அரசு,
40 சதவீதம்
நிதி
பங்களிப்புடன்
செயல்படுகிறது.
இத்திட்டத்தில்,
10 லட்சம்
ரூபாய்
வரை
மானியத்துடன்
கடன்
வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்த, விவசாயிகள் வேளாண் துறையை தொடர்பு கொண்டால், தக்காளி ஜூஸ் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.
அதன்
மூலம்
பயிற்சி
பெற்று
சொந்தமாக
தொழிற்சாலை
அமைத்து,
தக்காளியை
மதிப்புகூட்டு
பொருளாக
மாற்றி,
அதை
வெளி
நாடுகளுக்கு
ஏற்றுமதி
செய்து
அதிக
லாபம்
பெறலாம்.