TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
ஓசூரில் ஐபோன் தொழிற்சாலை – 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
கிடைக்கும்
என
தகவல்
ஓசூர் அருகே, டாடா நிறுவனத்துடன்
இணைந்து,
‘ஐ
போன்‘
தொழிற்சாலை
ஆரம்பிக்க
புரிந்துணர்வு
ஒப்பந்தம்
போடப்பட்டதால்,
60 ஆயிரம்
பேருக்கு
வேலைவாய்ப்பு
கிடைக்கும்
என,
தகவல்
வெளியாகியுள்ளது.
இந்தியாவில், பாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் போன்ற நிறுவனங்களால்,
‘ஆப்பிள்
ஐ
போன்‘
இணைத்து
உருவாக்கப்படுகிறது.
ஐ போன் நிறுவனத்திற்கு
உதிரி
பாகங்களை
தயாரித்து
கொடுக்கும்
வகையில்,
கிருஷ்ணகிரி
மாவட்டம்,
கெலமங்கலம்
ஒன்றியம்,
திம்ஜேப்பள்ளி,
ஊடேதுர்க்கம்
ஆகிய
பஞ்.,க்களில், 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், 570 ஏக்கரில், டாடா எலக்ட்ரானிக்ஸ்
நிறுவனம்
துவங்கப்பட்டுள்ளது.
இது, ‘ஐ போன்‘ நிறுவனத்துடன்
புரிந்துணர்வு
ஒப்பந்தம்
செய்து,
உதிரி
பாகங்கள்
தயாரித்து
கொடுக்கும்
பணியை
துவங்கியுள்ளது.
தற்போது ஒரு பிளான்ட் துவங்கப்பட்டுள்ள
நிலையில்,
6,000 க்கும்
மேற்பட்டவர்கள்
வேலைவாய்ப்பு
பெற்றுள்ளனர்.
இதில், 85 சதவீதம் பேர் பெண்கள். மொத்தம், மூன்று பிளான்ட் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
இதன் வாயிலாக படிப்படியாக, 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
கிடைக்கும்
என
தகவல்
வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டாடா நிறுவனம் தனது விரிவாக்க திட்டத்தில், ‘ஐ போன்‘ தயாரிக்கும் நிறுவனங்களுடன்
இணைந்து,
‘ஐ
போன்‘
தயாரிப்பு
தொழிற்சாலையை
ஓசூர்
அருகே
துவக்க
திட்டமிட்டுள்ளது.
அதற்கான பணிகளை டாடா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதை,
தொழில்துறை
அமைச்சர்
தங்கம்
தென்னரசு
உறுதி
செய்துள்ளார்.
இதன் வாயிலாக, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச்
சேர்ந்த
தொழிலாளர்கள்
வேலைவாய்ப்பு
பெறுவர்.
உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படும்
என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த,
ஐ
போன்
தொழிற்சாலை
உருவாக்கப்பட்டால்,
16 ஆயிரம்
பேருக்கான
வேலைவாய்ப்பு,
60 ஆயிரமாக
உயரும்
என,
நம்பப்படுகிறது.
முதற்கட்டமாக,
ராஞ்சி,
ஹஜாரிபாக்
பகுதியைச்
சேர்ந்த
பழங்குடியின
பெண்களுக்கு
பயிற்சி
அளித்து
வேலைவாய்ப்பு
வழங்கப்படும்
என,
மத்திய
அரசு
தரப்பில்
தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


