TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பொதுத் தேர்வு அகமதிப்பீடு: வழிகாட்டுதல்கள்
வெளியீடு
தமிழக பள்ளிக்கல்வி
பாடத்திட்டத்தில்
பயிலும்
+1,
+2
வகுப்பு
மாணவா்களுக்கான
பொதுத்
தோ்வு
அடுத்தாண்டு
மார்ச்
13ல்
தொடங்கி
ஏப்ரல்
5 வரை
நடைபெறவுள்ளது.
இந்த
தோ்வை
சுமார்
17.3 லட்சம்
மாணவ,
மாணவிகள்
எழுதவுள்ளனா்.
தற்போது தோ்வு மையங்களை இறுதி செய்தல், மாணவா் பெயா்ப் பட்டியல் தயாரிப்பு உள்பட தோ்வுக்கான முன்னேற்பாடுகள்
தீவிரமாக
மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
இந்நிலையில், பொதுத்தோ்வு
எழுதவுள்ள
+2,
+1
வகுப்பு
மாணவா்களுக்கான
அக
மதிப்பெண்
கணக்கீடு
தொடா்பான
வழிகாட்டு
நெறிமுறைகளை
அரசுத்
தோ்வுகள்
இயக்ககம்
தற்போது
வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் செய்முறைத் தோ்வில்லாத பாடங்களுக்கு
10 மதிப்பெண்கள்
அகமதிப்பீடாக
வழங்கப்படும்.
மாணவா்
வருகைப்பதிவுக்கு
2, பருவத்
தோ்வுக்கு
4, செயல்திட்ட,
களப்பணிகளுக்கு
2, என்சிசி,
கலை,
இலக்கிய
போன்ற
கல்வி
இணை
செயல்பாடுகளுக்கு
2 என
மொத்தம்
10 மதிப்பெண்
கணக்கிடப்படும்.
செய்முறை தோ்வுள்ள பாடங்களுக்கு
25 மதிப்பெண்கள்
அகமதிப்பீடாக
அளிக்கப்படும்.
அதில்,
மாணவா்
வருகைப்
பதிவுக்கு
5, பருவத்
தோ்வுக்கு
10, செயல்திட்ட,
களப்
பணிகளுக்கு
5, கல்வி
இணை
செயல்பாடுகளுக்கு
5 என
மொத்தம்
25 மதிப்பெண்கள்
கணக்கிடப்படும்.
இந்த வழிகாட்டுதலை
பின்பற்றி
மாணவா்களுக்கான
அகமதிப்பீடுகளை
விரைந்து
வழங்குவதற்கு
தேவையான
பணிகளை
தலைமையாசிரியா்கள்
மேற்கொள்ள
வேண்டும்.