HomeBlog1895 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளன

1895 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளன

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

1895 கௌரவ விரிவுரையாளர்கள்
தற்காலிகமாக
நியமிக்கப்பட உள்ளன

தமிழக உயர்கல்வித்துறை
ஒரு
முக்கிய
செய்தி
குறிப்பை
வெளியிட்டுள்ளது.
அதில்
கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில்
உள்ள
அரசு
கலை,
அறிவியல்
கல்லூரிகள்
மற்றும்
கல்வியியல்
கல்லூரிகளில்
காலியாக
உள்ள
உதவி
பேராசிரியர்கள்
பணி
நியமிக்கப்படும்
வரையில்,
கௌரவ
விரிவுரையாளர்கள்
தற்காலிகமாக
நியமிக்கப்படுவார்கள்.
அதன்படி  1895 கௌரவ விரிவுரையாளர்கள்
தற்காலிகமாக
நியமிக்கப்படுவார்கள்.

இப்படி நியமிக்கப்படும்
பேராசிரியர்களுக்கு
தொகுப்பூதிய
அடிப்படையில்
மாதம்
20
ஆயிரம்
ரூபாய்
சம்பளம்
கொடுக்க
முடிவு
செய்யப்பட்டுள்ளதால்,
அடுத்த
வருடம்
ஏப்ரல்
மாதம்
வரை
18
கோடி
95
லட்சம்
ரூபாய்
நிதி
ஒதுக்கீடு
செய்யப்பட
இருக்கிறது.

இந்நிலையில் அரசு விரிவுரியாளர்
பணிகள்
குறித்த
விவரங்களை
செய்திகளில்
வெளியிடுவதோடு,
கல்லூரிகளில்
உள்ள
நோட்டீஸ்
பலகைகளை
அது
தொடர்பான
விவரங்களை
ஒட்டி
வைக்க
வேண்டும்.

இதனையடுத்து விண்ணப்பிக்க
விரும்புபவர்கள்
www.tngasa.in
என்ற இணையதள முகவரியில்
பாஸ்போர்ட்
சைஸ்
புகைப்படம்,
முதுநிலை,
எம்.பில், பிஎச்டி பட்டம் மற்றும் முதுநிலை பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின்
நகல்கள்
போன்றவற்றை
பயன்படுத்தி
விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
மேலும்
ஏற்கனவே
அரசு
கல்லூரிகளில்
பணியாற்றியிருந்தால்
அவர்களுக்கு
அனுபவத்தின்
அடிப்படையில்
முன்னுரிமை
வழங்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular