TAMIL MIXER
EDUCATION.ன் JEE செய்திகள்
JEE நுழைவு
தேர்வு
கட்டணம்
கடும்
உயர்வு
JEE நுழைவு தேர்வுக்கு 2023ம் ஆண்டுக்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும்
இந்திய
மையங்களின்
எண்ணிக்கை
501ல்
இருந்து
102 ஆக
குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில்
பொறியியல்
படிப்புகளில்
சேர
வேண்டும்
என்றால்,
JEE எனப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது வரும் ஜனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒருவாரம் நடைபெற இருக்கிறது.
இதற்கான ஆன்லைன் பதிவு நடந்து வரும் நிலையில, வரும் 12ம் தேதி கடைசி நாளாகும். இதற்கிடையே தேசிய தேர்வு முகமை நுழைவு தேர்வுக்கான கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி உள்ளதால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறுகையில், ‘ஜே.இ.இ மெயின் தேர்வானது கடந்த 2022ம் ஆண்டில் 13 வெளிநாடுகளில்
மட்டுமே
நடைபெற்றது.
ஆனால்
அடுத்தாண்டு
(2023) 24 வெளிநாட்டு
தேர்வு
மையங்களில்
தேர்வு
நடைபெறும்.
அந்த
பட்டியலில்
முதன்
முறையாக
சீனா,
ரஷ்யா,
ஆஸ்திரேலியா,
அமெரிக்கா
ஆகிய
நாடுகளில்
இந்த
தேர்வு
நடைபெறும்.
மற்றபடி ஏற்கனவே பட்டியலில் இருந்த பஹ்ரைன், இலங்கை, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், ஓமன், சவுதி அரேபியா, சிங்கப்பூர், குவைத், மலேசியா, நைஜீரியா, இந்தோனேசியா, ஆஸ்திரியா, பிரேசில், கனடா, ஹாங்காங், மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ஜேஇ மெயின் தேர்வு நடைபெறும்.
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது
2023ம்
ஆண்டுக்கான
நுழைவு
தேர்வு
கட்டணம்
70 சதவீதம்
வரை
அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
2023ம்
ஆண்டில்
ஏதேனும்
ஒரு
தாள்
(பி.இ – பி.டெக் – பி.ஆர்க் – பி.பிளானிங்) எழுதும் பொது – இ.டபிள்யூ.எஸ் – ஓ.பி.சி பிரிவை சேர்ந்த இந்திய மாணவர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். அதே 2022ம் ஆண்டில் நிர்ணயக்கப்பட்ட
கட்டணம்
ரூ.650
ஆக
இருந்தது.
மேற்கண்ட பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டில்
உள்ள
தேர்வர்கள்
ரூ.5,000
கட்டணம்
செலுத்த
வேண்டும்.
அதே
2022ம்
ஆண்டில்
நடந்த
தேர்வின்
போது,
அவர்களுக்கான
கட்டணம்
ரூ.3,000
ஆக
இருந்தது.
2023ம் ஆண்டில் இரண்டு அல்லது மூன்று தாள்களை எழுதும் பொது – பொருளாதாரத்தில்
நலிவுற்றோர்
– ஓபிசி
பிரிவைச்
சேர்ந்த
இந்திய
மாணவர்கள்
ரூ.2,000
கட்டணம்
செலுத்த
வேண்டும்.
அவர்கள்
2022ம்
ஆண்டில்
ரூ
.1,300 கட்டணம்
செலுத்தினர்.
2023ல் இந்தியாவில் 399 மையங்களிலும்,
அதே
தேர்வு
2022ம்
ஆண்டில்
501 மையங்களிலும்
நடைபெறும்.
2023ம்
ஆண்டுக்கான
தேர்வு
மையங்களின்
எண்ணிக்கை
102 என்ற
அளவில்
தேசிய
தேர்வு
முகமை
குறைத்துள்ளது.
ஆனால்
வெளிநாடுகளில்
மையங்களில்
எண்ணிக்கையை
தேசிய
தேர்வு
முகமை
அதிகரித்துள்ளது.