🏅 கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் 2026 – ₹5 லட்சம் பரிசுடன் அரசு அறிவிப்பு! விண்ணப்பங்கள் தொடங்கியது 🔥
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” 2026 ஆம் ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை உயர்த்தும் பணியில் சிறப்பாக செயல்படும் நபருக்கு இந்த பெருமைக்குரிய விருது வழங்கப்படுகிறது.
இந்த பதக்கத்துடன்:
- ₹5,00,000 காசோலை
- ஒரு பதக்கம்
- தகுதியுரை (Citation)
என மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படும்.
🕊️ கோட்டை அமீர் யார்?
கோயம்புத்தூரை சேர்ந்த திரு. கோட்டை அமீர், மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்தவர்.
அவரின் நினைவாக, மக்கள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்தப் பதக்கத்தை உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் முதலமைச்சர் அவர்களால் இந்த விருது வழங்கப்படுகிறது.
📌 யார் விண்ணப்பிக்கலாம்? (Eligibility)
- மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்கள்
- வயது வரம்பு இல்லை
- சமூக நலன், சமாதானம், மத நல்லிணக்கம், மனிதநேயம் போன்ற துறைகளில் பங்களிப்பு இருந்தால் விண்ணப்பிக்கலாம்
📅 முக்கிய தேதிகள்
- பதக்கம் வழங்கப்படும் நாள்: 26 ஜனவரி 2026
- விண்ணப்ப கடைசி தேதி: 15 டிசம்பர் 2025
📄 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை:
1️⃣ மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அனுப்பலாம்
அல்லது
2️⃣ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:
விண்ணப்பத்துடன் தொடர்புடைய ஆதார ஆவணங்களை இணைக்க வேண்டும்.
⛔ கூறப்பட்ட தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
📝 தேர்வு செயல்முறை
- பதக்கம் பெறத்தகுதியானவரை அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழு தேர்வு செய்யும்
- இறுதி முடிவு தேர்வுக்குழுவின் பரிந்துரையில்
- 26 ஜனவரி 2026 அன்று முதலமைச்சர் பதக்கம் வழங்குவார்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

