📢 திட்டமிட்டபடி அக்.12-இல் முதுநிலை ஆசிரியர் தேர்வு – TRB அறிவிப்பு
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PG Assistant), உடற்கல்வி இயக்குநர் (Grade-1), கணினி பயிற்றுநர் (Grade-1) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, திட்டமிட்டபடி 2025 அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.
📌 தேர்வு அறிவிப்பு விவரம்
- அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: ஜூலை 10, 2025
- விண்ணப்பப் பதிவு முடிவடைந்த தேதி: ஆகஸ்ட் 12, 2025
- மொத்த காலியிடங்கள்: 1,996
- பதவிகள்: PG Assistant, Physical Director (Grade-1), Computer Instructor (Grade-1)
📌 வழக்கு & தீர்ப்பு
- கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்ட மாற்றம் காரணமாக தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
- சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு வாரியத்திற்கு பரிசீலிக்கலாம் என அறிவுறுத்தியது.
- ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் TRB, தேர்வை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்துள்ளது.
📌 TRB விளக்கம்
- TRB வழிகாட்டுதலின்படி அறிவிப்பு வெளியீடு & தேர்வு தேதிக்கு இடையே குறைந்தது 60 நாள் இடைவெளி அவசியம்.
- இம்முறை விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு 90 நாட்களுக்கு மேல் இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.
- ஆகவே, தேர்வு தள்ளிவைக்கப்படாது; திட்டமிட்டபடி அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும்.
🔔 மேலும் கல்வி & தேர்வு அப்டேட்களுக்காக எங்களை Join பண்ணுங்கள்:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

