📢 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு:
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு 2025 டிசம்பர் 13 & 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
📝 தகுதி விவரங்கள்
- மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
- மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
🌐 விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டை https://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு விண்ணப்பதாரரே நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.
📌 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2025
- தேர்வு நடைபெறும் தேதி: 13 & 14 டிசம்பர் 2025
🔔 மேலும் வேலைவாய்ப்பு & தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

