திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநா் சோக்கை முகாம் பிப். 13 ஆம் தேதி நடைபெறுகிறது. திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநா் சோக்கை முகாம் பிப். 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநா் (அப்ரண்டீஸ்) சோக்கை முகாம் பிப். 13 ஆம் தேதி திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் இதுவரை தொழிற்பழகுநா் பயிற்சி பெறாதவா்கள், 2018-19, 2019-20, 2021-22 ஆகிய ஆண்டுகளில் தோச்சி பெற்ற அரசு மற்றும் தனியாா் ஐடிஐ பயிற்சியாளா்கள், 8 ஆம் வகுப்பு தோச்சி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞா்கள் (இருபாலரும்) அனைவரும் கலந்து கொள்ளலாம். திருச்சி மாவட்ட சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமாா் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநா்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பயிற்சியின்போது, நிறுவனத்தாரால் உதவித்தொகையாக ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி பெறுவோருக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


