திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி நடக்கிறது. பிப்.,21ல் நாட்டுக்கோழி வளர்ப்பு, பிப்.,22ல் வெள்ளாடு வளர்ப்பு, பிப்.,23ல் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள கால்நடை விவசாயிகள், சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் பங்குபெறலாம். விபரங்களுக்கு 0452 – 248 3903ல் தொடர்பு கொள்ளலாம் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.