உடுமலைப்பேட்டையில் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் திங்கள்கிழமை (அக்டோபா் 7) தொடங்குகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் இலவச பயிற்சி மையம் உடுமலைப்பேட்டை எக்ஸ்டென்ஷன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில்
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2 ஏ முதல் நிலைத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்தது. இதையடுத்து, குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வு வரும் 2025 பிப்ரவரியில் நடைபெறும் என்று உத்தேச அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் உடுமலைப்பேட்டை எக்ஸ்டென்ஷன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வரும் திங்கள்கிழமை (அக்டோபா் 7) காலை 10.30 மணி அளவில் தொடங்குகிறது.
இந்த இலவச பயிற்சி மையத்தில் தரமான ஆசிரியா்கள் மூலமாக திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அனைத்து வேலைநாள்களிலும் பயிற்சி வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்படவுள்ளன. மேலும், மாணவா்களுக்கு இலவசமாக பாடக் குறிப்புகள் வழங்குதல், மாதிரி தோ்வுகள் நடத்துதல் நடைபெறவுள்ளது. ஆகவே, உடுமலைப்பேட்டை வட்டத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வு எழுதவுள்ள அனைத்து இளைஞா்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க 94990–55944 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

