TAMIL MIXER
EDUCATION.ன் ரேஷன் செய்திகள்
வறுமைக்கோடு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு
35 கிலோ
ரேஷன்
அரிசி
தேனி: வறுமைகோடு
பட்டியலில்
உள்ள
மாற்றுத்திறனாளிகளுக்கு
மட்டுமே
ஏ.ஏ.ஓய்., திட்டத்தில் 35 கிலோ அரிசி வழங்கப்படும்
என
மாவட்ட
வழங்கல்
அலுவலர்
சாந்தி
தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு
ரேஷன்
கார்டுக்கு
சிறப்பு
சலுகையாக
கூடுதலாக
15 கிலோ
அரிசி
வழங்கப்பட்டு
வந்ததது.
மாவட்டத்தில்
ஆறு
மாதங்களாக
கூடுதல்
அரிசி
வழங்கப்படுவதை
நிறுத்தியதாகவும்,
அந்தியோதயா
அன்ன
யோஜனா,
(ஏ.ஏ.ஒய்) திட்டத்தின் கீழ் கூடுதல் அரிசி வழங்க கோரி கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள்
முறையிட்டனர்.
இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கென்று
தனிப்பட்ட
ரேஷன்
கார்டுகள்
இல்லை.
கார்டுகளில்
உள்ள
குடும்ப
தலைவர்,
தலைவி
பெயர்களில்
மட்டுமே
பொருட்கள்
வழங்கப்பட்டு
வருகிறது.
இவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இருந்தால் 35 கிலோ அரிசி கிடைக்கும்.குடும் வருமான அடிப்படையில்
முன்னேறிய
குடும்ப
கார்டுதாரர்களுக்கு
மட்டும்
15 கிலோ
அரிசியாக
குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி
கார்டுதாரர்கள்
குடும்பத்தில்
யாரேனும்
வறுமைக்
கோட்டிற்கு
மேல்
வருமானம்
ஈட்டுபவராவோ
அல்லது
அரசு
ஊழியராகவோ
இருப்பின்
அவர்களுக்கு
35 கிலோ
அரிசி
வழங்கப்பட
மாட்டாது.
ஆறு
மாதங்களாக
தீவிர
விசாரிப்பிற்கு
பின்னரே
தகுதியில்லாத
மாற்றுத்திறனாளிகளுக்கு
கூடுதல்
அரிசி
வழங்குவது
நிறுத்தப்பட்டது.
மேலும் அந்தந்த பகுதி ரேஷன் ஊழியர்கள் கணக்கெடுப்புப்பின்படி
தகுதி
நீக்கம்
செய்யப்பட்டு
வருகிறது.
இதனால்
வறுமைக்
கோட்டிற்கு
கீழ்
உள்ள
குடும்பங்கள்
பயனடைய
வாய்ப்புள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


