HomeBlogதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2000 & 25 கிலோ அரிசி

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2000 & 25 கிலோ அரிசி

 

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

தனியார் பள்ளி
ஆசிரியர்களுக்கு மாதம்
ரூ.2000 & 25 கிலோ
அரிசி

நாடு
முழுவதும் CORONA நோய்த்தொற்று காரணமாக கடந்த வருட
மார்ச் மாதத்தில் பள்ளிகள்
மூடப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள்
ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. மேலும் பல மாநிலங்களில் தேர்வுகளும் ஆன்லைன் முறையில்
நடத்தப்பட்டது. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிகள்
மூடப்பட்ட போதிலும் முறையாக
ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால்
தனியார் கல்வி நிறுவனங்கள் பெரும் நிதிப்பற்றாக்குறையில் தள்ளப்பட்டன. இதனால் தனியார் பள்ளி
ஆசிரியர்களும் பெரும்
பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்
கொண்டு தெலுங்கானா மாநில
முதல்வர் அவர்கள் புதிய
அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட தனியார்
கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு நியாய விலைக் கடைகள்
மூலம் ரூ.2,000 நிதி
உதவியும், 25 கிலோ அரிசியும்
இலவசமாக கிடைக்கும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்
முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் வரை
ஆசிரியர்களுக்கு இந்த
உதவி கிடைக்கும்.

இந்த
முடிவு ஒரு மனிதாபிமான எண்ணத்தில் எடுக்கப்பட்டது, இது
மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார்
கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் 50 லட்சம் ஆசிரியர்கள் மற்றும்
ஊழியர்களுக்கு உதவும்
என்று முதல்வர் கூறியுள்ளார். உதவி பெற, ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தங்கள் வங்கி கணக்கு
விவரங்கள் மற்றும் பிற
தொடர்புடைய தகவல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் முதல்வர்
விளக்கியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular