TAMIL MIXER EDUCATION- ன் SSC தேர்வு பற்றிய செய்திகள்
காவல்துறையில் தலைமைக்
காவலர் பணிக்கு தேர்வுக்
கட்டணம் செலுத்த வரும்
17ம் தேதி கடைசி
நாள்
டெல்லி
காவல்துறையில் தலைமைக்
காவலர் பணிக்கான தேர்வு
குறித்து மத்திய அரசுப்
பணியாளர் தேர்வாணையமான SSC கடந்த
மாதம் 17ம் தேதி
அன்று அறிவிப்பை வெளியிட்டது.
அதில்
தகுதியான நபர்களை தேர்வு
செய்வதற்காக நடத்தப்படவுள்ள போட்டித்
தேர்வுக்கு நாட்டின் அனைத்துப்
பகுதிகளிலிருந்தும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என
மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையம் தெரிவித்தது.
தகுதியுடைய நபர்கள் மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையத்தின் https://ssc.nic.in/ என்ற
இணையதளத்தின் மூலம்
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கணினி
அடிப்படையிலான தேர்வு
முறையில் பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள்.
ஆன்லைனில்
விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வரும் 16ம் தேதி
கடைசி நாள். தேர்வுக்
கட்டணத்தை செலுத்துவதற்கு 17ம்
தேதி கடைசி நாள்
என ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தேர்வுகள் கணிணி
அடிப்படையில் வரும்
செப்டம்பர் மாதம் நடைபெறும்.
தென்
மாநிலத்தில் ஆந்திராவில் மொத்தம்
10 மையங்கள், தெலங்கானாவில் 3 மையங்கள்,
தமிழகத்தில் 3 மையங்கள் என
மொத்தமாக 20 இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பங்களை பூர்த்தி
செய்து இன்னும் அனுப்பாத
நபர்கள் உடனடியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.