திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:அம்பத்துார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ஜூலை 10ம் தேதி, பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி நடைபெற உள்ளது.
மத்திய – மாநில அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் மற்றும் தொழில் நிறுவன கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இப்பயிற்சியில், ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றோர் பங்கேற்று, மத்திய அரசின், என்.ஏ.சி., சான்றிதழ் பெற்று பயனடையலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற ‘இ – மெயில்’ மற்றும் 94990 55663, 87784 52515, 94441 39373 ஆகிய மொபைல் எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.