மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUET நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுமே 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் CUETமுதுகலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் எனவும் பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்திற்குள் வெளியிட்டப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் CUET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழக மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் இல்லை என திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன். கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் க்யூட் தேர்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் எனக் கூறப்பட்டிருந்தது. இதனால் தமிழக மாணவர்கள் தவித்து வந்த நிலையில் அந்த பகுதி நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


