18.5 C
Innichen
Thursday, July 31, 2025

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 5
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.

இந்த Part 5 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 8

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 10

1. பொருந்துக: வார்த்தைகளும் அவை இடம் பெற்றுள்ள நுhல்களும்:

பார் -அ) குறுந்தொகை
அரசு – ஆ) தொல்காப்பியம்
புகழ் -இ)பெரும்பாணாற்றுப் படை
செய் – ஈ)திருக்குறள்

அ) இஈஆஅ ஆ) இஈஆஅ இ) ஈஆஅஇ ஈ)இஆஅஈ

விடை: அ) இஈஆஅ

2. திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலம் அவற்றின் அளவை சுருக்க முடியாது? என்ற கருத்தைப் பாடியவர் யார்?

அ) ஔவையார் ஆ) கபிலர் இ) ஆண்டாள் ஈ) வள்ளுவர்

விடை: அ) ஔவையார்

3. தமிழ் வழியல் பயினற அறிவியல அறிஞர்கள் யார் யார்?

அ)அப்துல் கலாம் ஆ) மயில் சாமி அண்ணாதுரை இ)இஸ்ரோ சிவன் ஈ)இவர்கள் அனைவரும்

விடை: ஈ)இவர்கள் அனைவரும்

4. “தொலைவில் உள்ள பொருளை அருகில் தோன்ற செய்ய முடியும்” என்ற கருத்ததை பாடியவரும் ஆது இடமபெற்ற நூலும் முறையே

அ) ஔவையார் வாயுதாரணை ஆ)கபிலர் , திருவள்ளுவமாலை இ)திருமுலர் திருமந்திரம் ஈ)சேக்கிழார் பெரியபுராணம்

விடை: ஆ)கபிலர் , திருவள்ளுவமாலை

5. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?

அ) நாமக்கல் கவிஞர் ஆ)கவிமணி இ)பாரதிதாசன் ஈ)பாரதியார்

விடை: ஈ)பாரதியார்

6. பறவைகள் வலசை போகும் திசை எது?

அ) வடக்கிலிருந்து தெற்கு ஆ)மேற்கிலிருந்த கிழக்கு இ) அ,ஆ இரண்டும் ஈ)இரண்டும் இல்லை

விடை: இ) அ,ஆ இரண்டும்

7. துறைமுக நகரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

அ)பட்டினம் பாக்கம் ஆ)பெருநகரம் இ)வணிக நகரம் ஈ)மாநகர்

விடை: அ)பட்டினம் பாக்கம்

8. “பொன்னோடு வ்நது கறியொடு பெயரும்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

அ) பதிற்றுப்பத்து ஆ) கலித்தொகை இ) புறநானூறு ஈ)அகநானூறு

விடை: ஈ)அகநானூறு

9. பொருந்துக: உவமைகளும் அதற்கு கூறப்பட்டுள்ள பொருள்களும்

நீச்சல் – அ)போர்வை
பனிமூட்டம் – ஆ) யோகம்
மின்னல்வரி – இ)பெருவானம்
தொழும் தலைவன் – ஈ)அரிச்சுவடி

அ) இஆஅஈ ஆ) அஈஇஆ இ) ஆஅஇஈ ஈ)ஆஅஈஇ

விடை: ஈ)ஆஅஈஇ

10. திராவிட நாட்டின் வானம்பாடி என்று போற்றப்பட்டவர் யார்?

அ) கவிப்பேரரசு ஆ) கவியரசர் இ)முடியரசன் ஈ)எத்திராசலு

விடை: இ)முடியரசன்

11. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 2 ஆ)8 இ) 4 ஈ)5

விடை: ஆ)8

12. குஜராத், ராஜஸ்த்தான், மாநிலங்களில் பொங்கல் விழா எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?

அ)லோரி ஆ)மகரசங்ராந்தி இ) உத்தராயன் ஈ)பொங்கல்

விடை: இ) உத்தராயன்

13. அண்ணா நுற்றாணடு நூலகத்தில் 6ஆம் தளத்தில் உள்ள நூல்கள் எவை?

அ) பிரெய்லி குழந்தைப்பருவ நூல்கள் ஆ)பொறியியல்,வேளாண்மைஈ திரைப்படம் இ)கல்வி போட்டித்தேர்வுகள் ஈ)வரலாறு ஒலைச்சுவடிகள்

விடை: ஆ)பொறியியல்,வேளாண்மைஈ திரைப்படம்

14. குழந்தைகளுக்காக கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

அ) பிரம்ம சமாஜம் ஆ)ஆர்ய சமாஜம் இ) சத்ய சமாஜம் ஈ)குழந்தைகளைப் பாதுகாப்போம்

விடை: ஈ)குழந்தைகளைப் பாதுகாப்போம்

15. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நூல் எது?

அ) உபபாண்டவம் ஆ) கதாவிலாசம் இ)தேசாந்திரி, கால்முளைத்தக் கதைகள் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

16. பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் நாள் எந்த நாள்?

அ)வைகாசி திங்கள் முழுநிலவு நாள் ஆ)அமாவாசை இ) அஷ்டமி ஈ)நவமி

விடை: அ)வைகாசி திங்கள் முழுநிலவு நாள்

17. உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னால் பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தை எது?

அ) ஓர் ஆ)ஒரு இ) ஒன்று ஈ)அனைத்தும்

விடை: ஆ)ஒரு

18. பெயர்ச்சொல், வினைச்சொல், ஆகியவற்றின் தன்மையை மிகுதிபடுத்த வருவது

அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) உரிச்சொல் ஈ)இடைச்சொல்

விடை: இ) உரிச்சொல்

19. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு

அ) 1960 ஆ) 1985 இ)1780 ஈ)1820

விடை: இ)1780

20. காந்தியடிகளிடம் உடையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்?

அ)கோவை ஆ)மதுரை இ) சென்னை ஈ)ஈரோடு

விடை: ஆ)மதுரை

21. பொருந்துக:

பந்தர் – அ)முதற்போலி
மைஞ்சு -ஆ) கடைபோலி
அஞ்சு -இ)அரையர்
குழுஉக்குறி -ஈ)முற்றுபோலி
இடைபோலி உ) காரை,பறி

அ) ஆஅஈஉஇ ஆ) அஈஉஇஆ இ) அஆஈஉஇ ஈ) உஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஉஇ

22. பொருந்துக

மருஉ – அ)கால் கழுவி வந்தான்
இடக்கரடக்கல் – ஆ) கோவை
மங்கலம் – இ) காரை பறி
குழுஉக்குறி -ஈ)துஞ்சினார்

அ) ஆஅஈஅ ஆ) அஈஇஆ இ) அஆஈஇ ஈ) ஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஅ

23. முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்

அ)கோவை ஆ)சாயல்குடி இ) சென்னை ஈ)ஈரோடு

விடை: ஆ)சாயல்குடி

24. பொருந்துக

பொக்கிஷம் – அ)மிகுதி
சாஸ்தி – ஆ)செல்வம்
விஸ்தாரம் – இ)அழகு
சிங்காரம் – ஈ)பெரும்பரப்பு

அ) ஆஅஈஉ ஆ) ஆஅஈஅ இ) அஆஈஇ ஈ) ஆஅஈஇ

விடை: ஆ) ஆஅஈஅ

25. ………… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?

அ) பொறாமை இல்லாதவன் செல்வம் ஆ)பொறாமை உள்ளவன் செல்வம் இ) உழைப்பவன் செல்வம ஈ)உழiக்காதவன் செல்வம்

விடை: ஆ)பொறாமை உள்ளவன் செல்வம்

26. ஜாதவ் பயேங் பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு

அ) 2010 ஆ)2015 இ) 2020 ஈ)1990

விடை: ஆ)2015

27. கடலில் துறை அறியாமல் கலங்குவன

அ) மரக்கலங்கள் ஆ) மீன்கள் இ) தூண்கள் ஈ)மாடங்கள்

விடை: அ) மரக்கலங்கள்

28. பூம்புகார் சிற்பக் கலைக்கூடத்தில் கண்ணகியின் வரலாற்றை விளக்கும் சிற்பத் தொகுதிகள் எத்தனை?

அ) 50 ஆ) 49 இ) 120 ஈ)180

விடை: ஆ) 49

29. வண்கீரை – பிரித்து எழுதுக?

அ) வண் + கீரை ஆ)வன்மை + கீரை இ) வலிமை + கீரை ஈ) வன் + கீரை

விடை: ஆ)வன்மை + கீரை

30. தேனரசன் எழுதிய நூல் எது?

அ) மண்வாசல் ஆ)வெள்ளை ரோஜா இ) பெய்து பழகிய மேகம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

31. ‘பை’ ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் என்ன?

அ) முதுமை ஆ)இளமை இ) தபெருமை ஈ)சிறுமை

விடை: ஆ)இளமை

32. “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரததேசமென்று தோள்கொட்டுவோம்- என்று பாடியவர் யார்?

அ) மு.மேத்தா ஆ) பாரதியார் இ)தமிழன்பன் ஈ)பாவேந்தர்

விடை: ஆ) பாரதியார்

33. பொருந்துக

கழனி -அ)சமம்
நிகர் – ஆ)வயல்
பரிதி – இ) மேகம்
முகில் – ஈ)கதிரவன்

அ) அஈஇஆ ஆ) ஆஅஈஇ இ) இஆஅஈ ஈ) ஈஆஅஇ

விடை: ஆ) ஆஅஈஇ

34. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி எது?

அ)இந்தி ஆ) தோடா இ)கோண்டி ஈ)சமஸ்கிருதம்

விடை: ஈ)சமஸ்கிருதம்

35. காயிதே மில்லத் என்ற அரபுசொல்லுக்கு பொருள் என்ன?

அ)தூய துறவி ஆ)சமுதாய வழிகாட்டி இ) ஒழுக்கவாதி ஈ)இறையியல் வாதி

விடை: ஆ)சமுதாய வழிகாட்டி

36. ‘கவியரசு’ என்னும் சிறப்புபெயரால் அழைக்கப்படுபவர் யார்?

அ)வாணிதாசன் ஆ)கண்ணதாசன் இ)பாரதிதாசன் ஈ)காளிதாசன்

விடை: ஆ)கண்ணதாசன்

37. …………….. ஒரு நாட்டுக்கு அரணல்ல

அ) நிலம் ஆ) தெளிந்த நீர் இ) காடு ஈ)வயல்

விடை: ஈ)வயல்

38. ஜென் என்னும் ஜப்பானிய மொழிச்சொல்லுக்கு பொருள் என்ன?

அ) குரு ஆ)சீடன் இ) தலைவன் ஈ)தியானம் செய்

விடை: ஈ)தியானம் செய்

39. ஓருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவம் என்பது ………… நெறி

அ)திராவிட ஆ) ஆர்ய இ)பொதுவுடைமை ஈ)தனியுடைமை

விடை: இ)பொதுவுடைமை

40. பொருந்துக

விளைநிலம் – அ)ஈகை
விதை – ஆ) இனியசொல்
களை – இ) உண்மை
உரம் – ஈ) வன்சொல்

அ) அஈஇஆ ஆ) ஆஅஈஇ இ) இஆஅஈ ஈ) ஈஆஅஇ

விடை: ஆ) ஆஅஈஇ

41. கவிமணி எழுதாத நூல் எது?

அ) ஆசியா ஜோதி ஆ)மருமக்கள் வாழிமான்மியம் இ) தேர்பிறந்த கதை ஈ) என்கதை

விடை: ஈ) என்கதை

42. நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை?

அ) 4 ஆ) 3 இ) 5 ஈ) 8

விடை: ஆ) 3

43. ‘வல்லுருவம்’ பிரித்து எழுதுக?

அ) வன்+ உருவம் ஆ) வன்மை+ உருவம் இ) வலிமை+ உருவம் ஈ) வண்மை+ உருவம்

விடை: ஆ) வன்மை+ உருவம்

44. கரிகாலன் கல்லணையை கட்டினான்’ இது எவ்வகைத் தொடர்?

அ) தன்வினைத் தொடர் ஆ)பிறவினைத்தொடர் இ)உணர்ச்சித்தொடர் ஈ)வினாத்தொடர்

விடை: அ) தன்வினைத் தொடர்

45. ‘தமிழகப் பழங்கடிகள்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) சுப்ரபாரதிமணியன் ஆ) கந்தர்வன் இ) பகவத்சல பாரதி ஈ)கமலாலயன்

விடை: இ) பகவத்சல பாரதி

46. “இன்னோசை” பிரித்து எழுதுக

அ) இனிமை+ ஓசை ஆ)இன்+ ஓசை இ)இனி+ மைஓசை ஈ)இன்மை+ ஓசை

விடை: அ) இனிமை+ ஓசை

47. பொருந்துக

மட்பாண்டம் – அ) கெடுதல்
மரவேர் – ஆ) திரிதல
மணிமுடி -இ) தோன்றல்
கடைத்தெரு -ஈ) இ)இயல்பு பணர்ச்சி

அ) ஆஅஈஇ ஆ) இஆஅஈ இ) ஆஅஈஇ ஈ) ஆஅஇஈ

விடை: அ) ஆஅஈஇ

48. பொருந்துக

ஆயிரம் காலத்து பயிர் – அ) இயலாத செயல்
கானல் நீர் -ஆ) நீண்டகாலம் இருப்பது
கல்லில் நார் உரித்தல் -இ) ஆராய்ந்து பாராமை
கண்ணை மூடிக்கொண்டு -ஈ) விரைந்து வெளியேறு
கம்பிநீட்டு -உ) இருப்பது போல தோன்றும் ஆனால் இருக்காது

அ) ஆஉஅஇஈ ஆ) ஆஉஅஇஈ இ) ஆஉஅஇஈ ஈ) ஆஉஅஇஈ

விடை: அ) ஆஉஅஇஈ

49. வண்புகழ் மூவர் கண்பொழில் வரைப்பு? இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நால் எது

அ) நன்னூல் ஆ)தொல்காப்பியம் இ) வீரசோழியம் ஈ)பிங்கள நிகண்டு

விடை: ஆ)தொல்காப்பியம்

50. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) நர்மதா ஆ) வைகை இ)அமராவதி ஈ)காவிரி

விடை: இ)அமராவதி

51. தமிழ்நாட்டின் ஹாலந் எனறழைக்கப்படும் இடம் எது?

அ) மதுரை ஆ) திண்டுக்கல் இ)கோவை ஈ)திருநெல்வேலி

விடை: ஆ) திண்டுக்கல்

52. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது ஆவது பெரியநகரம் எது?

அ) கீருஷ்ணகிரி ஆ)தருமபுரி இ) காஞ்சி ஈ)ஈரோடு

விடை: ஈ)ஈரோடு

53. பின்னலாடை நகரம் எனப்படும் நகரம் எது?

அ)கோவை ஆ) ஈரோடு இ) நீலகிரி ஈ)திருப்பூர்

விடை: ஈ)திருப்பூர்

54. இரண்டு பொருள்களுக்கு இடையே யுள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது வேறறுமை அணி

அ) சிலேடை அணி ஆ) வேற்றுமைஅணி இ) தன்மை நவிற்சி அணி ஈ)வஞ்சப்புகழ்சி அணி

விடை: ஆ) வேற்றுமைஅணி

55. “அன்னை பூமி” என்ற புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றவர் யார்?

அ) ராஜம் கிருஷணன் ஆ) திலகவதி இ) கோமகள் ஈ)லீனா மணிமேகலை

விடை: இ) கோமகள்

56. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்

அ) நேரு ஆ) சரோஜினி நாயுடு இ)ராதாகிருஷ்ணன் ஈ)அம்பேத்கார்

விடை: ஈ)அம்பேத்கார்

57. பூனா ஒப்பந்தம் ………. மாற்ற ஏற்படுத்தப்பட்டது?

அ)எழுத்துரிமை ஆ) பேச்சுரிமை இ)இரட்டை வாக்குரிமை ஈ)சமய உரிமை

விடை: இ)இரட்டை வாக்குரிமை

58. சமத்துவ சமுதாயம் அமைய அம்பேத்கார் ஏற்படுத்திய இயக்கம் எது?

அ)ஆர்ய சமாஜம் ஆ)பிரம்ம சமாஜம் இ) பிராத்தனை சமாஜம் ஈ)சமாத சமாஜ் சங்கம்

விடை: ஈ)சமாத சமாஜ் சங்கம்

59. மு.மேத்தா எழுதிய நூல் எது?

அ)கண்ணிர்ப் பூக்கள், ஊர்வலம், ஆ)சோழநிலா, இ) மகுடநிலா ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

60. திருப்பாவை என்னும் நூலைத்தழுவி “கன்னிப்பாவை” என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) கிP.ராஜநாராயணன் ஆ)சோ.தர்மன் இ)சே.சேசுராஜா ஈ)ப.ஜெயபிரகாசம்

விடை: இ)சே.சேசுராஜா

61. மால்தோ,தோடா, கோண்டி, முதலிய மொழிகளோடு தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து தமிழியன் என்று பெயரிட்டவர் யார்?

அ)கால்டுவெல் ஆ)பிரான்சிஸ் எல்லிஸ் இ) ஹோக்கன் ஈ)மாக்ஸ் முல்லர்

விடை: இ) ஹோக்கன்

62. திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுளளன?

அ) 8 ஆ)3 இ) 4 ஈ)6

விடை: ஆ)3

63. திணை,பால்,எண்,இடம், -இவற்றை காட்டாத முதன்மை மொழி?

அ) தமிழ் ஆ) தெலுஙகு இ) கன்னடம் ஈ)மலையாளம்

விடை: ஈ)மலையாளம்

64. “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என்று கூறும் நூல் எது?

அ) தொல்காப்பியம் ஆ) பிங்கள நிகண்டு இ) நன்னூல் ஈ)சேந்தன் திவாகரம்

விடை: ஆ) பிங்கள நிகண்டு

65. பொருந்துக

கால்வீசம் – அ)
அரைவீசம் – ஆ)
முக்கால் வீசம -இ)
ஆரைமா -ஈ)

அ) ஆஅஈஇ ஆ) இஆஅஈ இ) ஆஅஈஇ ஈ) ஆஅஇஈ

விடை: அ) ஆஅஈஇ

66. அவர்கள் ந்னறாகப் படித்தனர் – இது எவ்வகை வாக்கியம்?

அ)செய்தி வாக்கியம் ஆ)உணர்ச்சி வாக்கியம் இ)கட்டளைவ வாக்கியம் ஈ)வினா வாக்கியம்

விடை: அ)செய்தி வாக்கியம்

67. ‘ஆடுங்கிளை’ இலக்கணக் குறிப்பு தருக?

அ) வினையெச்சம் ஆ)பெயரெச்சம் இ) தொழிற்பெயர் ஈ)வினைத்தொகை

விடை: ஆ)பெயரெச்சம்

68. பொருந்துக

சுந்தரர் – அ) திருத்தொண்டர் திருவந்தாதி
நம்பியாண்டார் நம்பி -ஆ) திருத்தொண்டர் தோகை
சேக்கிழார் – இ)திருவிளையாடல் புராணம
பரஞ்சோதி முனிவர் – ஈ)பெரியபுராணம்

அ) அஆஇஈ ஆ) ஆஅஇஈ இ)இஅஆஈ ஈ)ஆஅஈஇ

விடை: ஈ)ஆஅஈஇ

69. “மழைக்காலமும் குயிலோசையும்” என்ற நூலை எழுதியவர் யார்?

அ)மா.கிருஷ்ணன் ஆ) அகிலன் இ) புதுமைப் பித்தன் ஈ)புலமைப்பித்தன்

விடை: அ)மா.கிருஷ்ணன்

70. “பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை : எட்டினோடு இரண்டும் அறியேனையே” என்று கூறும் நூல் எது?

அ) மணிமேகலை ஆ) சிலம்பதிகாரம் இ) திருவாசகம் ஈ)கம்பராமயணம்

விடை: இ) திருவாசகம்

71. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது?

அ) குறிப்பறிதல் ஆ) தகை அணங்குறுத்தல் இ) உறுப்புநலனழிதல் ஈ)கற்பியல

விடை: அ) குறிப்பறிதல்

72. இணையவழி வணிகத்தை கண்டறிந்தவர் யார்?

அ) ஜான் ஷெப்பர்ட் ஆ) காரல் கபெக் இ)மைக்கல் ஆல்ட்ரிச் ஈ)செஸ்டர் கார்சன்

விடை: இ)மைக்கல் ஆல்ட்ரிச்

73. “இணையத்தில் இது இல்லை என்றால் அது உலகத்தில் நடைபெறவில்லை” என்று கூறியவர் யார்?

அ) காரல் மார்க்ஸ் ஆ)வால்டேர் இ)ரூஸே ஈ)டிம் பெர்னெஸ் லீ

விடை: ஈ)டிம் பெர்னெஸ் லீ

74. 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு எது?

அ)தேசிய திறனறித் தேர்வு ஆ) மாநிலத் திறனறித் தேர்வு இ) ஊரகத் திறனறித் தேர்வு ஈ)எதுவுமில்லை

விடை: இ) ஊரகத் திறனறித் தேர்வு

75. “சித்தாரா” என்ற செயலியை உருவாக்கியவர் யார்?

அ) அப்துல் கலாம் ஆ) விக்ரம் சாராபாய் இ) இஸ்ரோ சிவன் ஈ)சதிஷ் தவான்

விடை: இ) இஸ்ரோ சிவன்

76. “இந்திய ஏவுகணையின் நாயகன்” என்றுஅழைக்கப்படுபவர் யார்?

அ)அப்துல் கலாம் ஆ)சிவன் இ)மயில்சாமி அண்ணாதுரை ஈ) விக்ரம சாராபாய்

விடை: அ)அப்துல் கலாம்

77. மீனவர்களுக்கு உதவும் செயலியின் பெயர் என்ன?

அ)இலா ஆ)வேர்டு ஸ்மித் இ)நேவிக் ஈ) சித்தாரா

விடை: இ)நேவிக்

78. இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?

அ)அப்துல் கலாம் ஆ)சிவன் இ)மயில்சாமி அண்ணாதுரை ஈ) விக்ரம சாராபாய்

விடை: இ)மயில்சாமி அண்ணாதுரை

79. அடையாற்றில் ஔவை இல்லம் மற்றும் புற்றுநோய் மருத்துவமனை நிறுவியவர் யார்?

அ)அஞ்சலையம்மாள் ஆ)ராமாமிர்தம் இ) முத்துலெட்சுமி ஈ)அன்னிபெசன்ட்

விடை: இ) முத்துலெட்சுமி

80. “வில்வாள்” இலக்கணக் குறிப்பு தருக?

அ)உம்மைத்தொகை ஆ)உருவகம் இ)எண்ணும்மை ஈ)முற்றும்மை

விடை: அ)உம்மைத்தொகை

81. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்?

அ) தாராபாரதி ஆ)பாவாணர் இ) கவிமணி ஈ)இரா.இளங்குமரன்

விடை: ஆ)பாவாணர்

82. “தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே” என்னும் பாடலை எழுதியவர் யார்?

அ) பாரதியார் ஆ)பாவேந்தர் இ)கவிமணி தேசிய விநாயகனார் ஈ)க.நமச்சிவாயர்

விடை: ஈ)க.நமச்சிவாயர்

83. “இவள் தலையில எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்”-ஸ்ரீ இஇத்தொடரில் கற்காலம் என்பது எது?

அ) தலையெழுத்து ஆ)பழையகாலம் இ) கற்காலம் ஈ) தலையில் கல் சுமப்பது

விடை: ஈ) தலையில் கல் சுமப்பது

84. “பூக்கையை குவித்த பூவே புரிவோடு காக்க” என்று ……………., , …………. வேண்டினார்

அ) எலிசபெத் கருணையனுக்காக ஆ) கருணனையன் கடவுளுக்காக இ) கருணையன் எலிசபெத்துக்காக ஈ)கடவுள் கருணையனுக்காக

விடை: இ) கருணையன் எலிசபெத்துக்காக

85. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கூறுவது எதனை?

அ) சுதந்திர போராட்டம் ஆ) பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது இ)பொருளாதார வளர்ச்சி ஈ)அறிவியல் வளர்ச்சி

விடை: ஆ) பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது

86. “வாய்மையே மழைநீராகும்” இத்தொடரில் வெளிப்படும் அணி?

அ)உவமைஅணி ஆ) உருவக அணி இ)சிலேடை அணி ஈ)தீவகஅணி

விடை: அ)உவமைஅணி

87. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து இதை எழுதுகிறேன்-இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்வது என்ன?

அ) பணம்சம்பாதிக்க எழுதினார் ஆ) சமுகப்பாவையோடு கலைப்பணி புரியவே எழுதினார் இ) சீர்த்திருத்தத்திற்காக எழுதினர் ஈ) இலக்கிய வளர்ச்சிக்காக எழுதினார்

விடை: ஆ) சமுகப்பாவையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

88. “எண்ணங்கள்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ) உதயமூர்த்தி ஆ)கிருஷ்ணமூர்த்தி இ)ராசமாணிக்கனார் ஈ)மா.நன்னன்

விடை: அ) உதயமூர்த்தி

89. மேன்மை தரும் அறம் என்பது எது? கைமாறு கருதாமல் அறம் செய்வது

அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது ஆ) பிரதிபலன் பார்த்து உதவி செய்தல் இ)உள்நோக்கத்தோடு உதவி செய்தல் ஈ)எதுவமில்லை

விடை: அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது

90. “இகழ்ந்தால் என்மனம் இறந்துவிட்டது” என்று கூறும் நூல் எது?

அ)இது எங்கள் கிழக்கு ஆ) வைகறை மேகங்கள் இ) காலக்கணிதம் ஈ)இயேசு காவியம்

விடை: இ) காலக்கணிதம்

91. மணிமேகலையிலும் அமைந்த பாவினம் எது?

அ) அகவற்பா ஆ) வெண்பா இ) கலிப்பா ஈ)வஞ்சிப்பா

விடை: அ) அகவற்பா

92. மாலவன் குன்றம் போனலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் – இதில் மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும், முறையே

அ) குமரி, சித்தூர் ஆ) சித்தூர் குமரி இ)திருத்தணிஈ திருப்பதி ஈ)திருப்பதி திருத்தணி

விடை: ஈ)திருப்பதி திருத்தணி

93. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது எது?

அ) சிலம்பதிகாரம் ஆ)மணிமேகலை இ) சீவகசிந்தாமணி ஈ)வளையாபதி

விடை: அ) சிலம்பதிகாரம்

94. “மாபாரதம் தமிழ்ப்படுத்துதும் மதுராபுரி சங்கம் வைத்தும்”- சின்னமனுர் செப்பேடு கூறும் செய்தி

அ)சங்கம் இருந்தது பற்றி ஆ)சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது இ)மதுரை நகர்பற்றி ஈ)மகாபாரதம் பற்றி

விடை: ஆ)சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

95. அருந்துணை- பிரித்து எழுதுக

அ)அருமை + துணை ஆ) அரு + துணை இ) அருந் + துணை ஈ) அரும் + துணை

விடை: அ)அருமை + துணை

96. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – இவ்வடிகள் எதைக் குறிக்கிறது?

அ) வீரம் ஆ)செல்வம் இ)கல்வி ஈ)கொடை

விடை: இ)கல்வி

97. இடைக்காடர் பாடலை இகழ்ந்தவர் ………. இடைக்காடரை மதித்தவர் ………….

அ) அமைச்சர், மக்கள் ஆ) மன்னன், புலவர் இ)மன்னன்,,இறைவன் ஈ)இறைவன் மன்னன்

விடை: இ)மன்னன்,,இறைவன்

98. காசிக் கண்டம் என்பது

அ)வடஇந்திய கலாச்சார பெருமை பாடும் நூல் ஆ)காசி நகரத்தின் பெருமை பற்றிக் கூறுகிறது இ)காசிவிஸ்வநாதரைப் பாடுகிறது ஈ)இவை அனைத்தும்

விடை: ஆ)காசி நகரத்தின் பெருமை பற்றிக் கூறுகிறது

99. “சிலம்பு அடைத்திருந்த பாக்கம் எய்தி” இத்ததொடரில் பாக்கம் என்பது

அ) பேருர் ஆ) மூதூர் இ) சிற்றூர் ஈ)அரண்மனை

விடை: இ) சிற்றூர்

100. ”ஆறாம் திணை” என்ற நூலை எழுதியவர் யார்?

அ)மா.நன்னன் ஆ)அபி இ)கல்யாண்ஜி ஈ)மருத்துவர்.கு.சிவராமன்

விடை: ஈ)மருத்துவர்.கு.சிவராமன்

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST

இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 5 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH
TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH

Important Notes

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

Topics

🔥 தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 1639+ காலியிடங்கள்!

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான...

திருச்சி DHS வேலைவாய்ப்பு 2025 – 13 காலியிடங்கள் அறிவிப்பு! 💼 உடனே விண்ணப்பிக்குங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் ஆப்டோமெட்ரிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ANM, மருந்தாளுநர் உள்ளிட்ட 13 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 31.07.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே!

🎯 திருப்பூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 108 பதவிகள் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம், மாவட்டத்திற்குள் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்ற 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பிசியோதெரபிஸ்ட், OT டெக்னீசியன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

🏥 வேலூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 22 அரசு ஒப்பந்த வேலைகள் (Nurse, Pharmacist, Lab Technician, MPHW & Others)

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப வல்லுநர்கள், MPHW உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 11.08.2025.

🏥 திருவள்ளூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 8 அரசு ஒப்பந்த வேலைகள் (Pharmacist, Nurse, Lab Technician, MPHW)

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர், ஆய்வக வல்லுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 11.08.2025 மாலை 5 மணி.

🏥 திருநெல்வேலி DHS வேலைவாய்ப்பு 2025 – 45 NUHM பணியிடங்கள்: நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பல!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் 45 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்: Staff Nurse, Pharmacist, Lab Technician, Health Inspector, ANM, MPHW. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 நாகப்பட்டினம் DHS வேலைவாய்ப்பு 2025 – மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியிடங்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத் துறையில் 08+ வேலைவாய்ப்புகள்: மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 தர்மபுரி DHS வேலைவாய்ப்பு 2025 – 107 மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

தர்மபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் 107 வேலைவாய்ப்பு அறிவிப்பு! நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், பல் அறுவை நிபுணர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025.

Related Articles

Popular Categories