HomeNotesAll Exam Notes6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 2
- Advertisment -

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 2
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.

இந்த Part 2 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1

1. முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

அ) 30 ஆ) 12 இ) 18 ஈ) 247

விடை: அ) 30

2. ஒருவர்ககு சிறந்த அணி என்பது எது?

அ)பணம்,புகழ் ஆ)பணிவு,இன்சொல் இ)அழகு,அணிலன்கள் ஈ)வீடு,நிலம்

விடை: ஆ)பணிவு,இன்சொல்

3. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்ற அப்துல்கலாம் அவர்ளால் பாராட்டப்பட்டவர் யார்?

அ)இஸ்ரோ சிவன் ஆ)மயில்சாமி அண்ணாதுரை இ)நெல்லை.சு.முத்து ஈ)விக்ரம் சாராபாய்

விடை: இ)நெல்லை.சு.முத்து

4. ‘ரோபோ’ என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?

அ)ரைட் சகோதரர்கள் ஆ)ஜேம்ஸ் வாட் இ)செஸ்டர்ன கார்லசன் ஈ)காரல் கபெக்

விடை: ஈ)காரல் கபெக்

5. அப்தல்கலாம் அவர்களுக்கு பிடித்தமான நுhல் எது?

அ)திருக்குறள் ஆ)நாலடியார் இ)எட்டுத்தொகை ஈ)பத்துப்பாட்டு

விடை: அ)திருக்குறள்

6. மெய்யெழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள் மொழி இறுதியில் வரும்?

அ)11 ஆ) 15 இ) 20 ஈ)18

விடை: அ)11

7. “நாட்டுப்புற இயல் ஆய்வு” என்னும் நுhலைத் தொகுத்தவர் யார்?

அ)வானமாமலை ஆ)சு.சக்திவேல் இ)புவியரசு ஈ)தென்னிந்திய புத்தக நிறுவனம்

விடை: ஆ)சு.சக்திவேல்

8. வணிகம் + சாத்து சேர்த்து எழுதுக

அ)வணிகசாத்து ஆ)வணகச்சாத்து இ)வணிகம்சாத்து ஈ)வணிகந்சாத்து

விடை: ஆ)வணகச்சாத்து

9. சுட்டு எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும் எனில் அது எவ்வகைச் சுட்டு?

அ)அண்மைச்சுட்டு ஆ)அகச்சுட்டு இ) புறச்சுட்டு ஈ)சேய்மைசுட்டு

விடை: இ) புறச்சுட்டு

10. வினா எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 6 ஆ) 8 இ)5 ஈ) 4

விடை: இ)5

11. வணிகர்களின் நேர்மையை “நடுவுநின்ற நன்னெஞ்சினோர்” என்று பாராட்டும் நுhல் எது?

அ) பரிபாடல் ஆ) கலித்தொகை இ) நெடுநல்வாடை ஈ)பட்டினப்பாலை

விடை: ஈ)பட்டினப்பாலை

12. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எவை?

அ) தங்கம் ஆ) வெள்ளி இ)வைரம் ஈ) குதிரைகள்

விடை: ஈ) குதிரைகள்

13. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

அ)6 ஆ)4 இ) 8 ஈ) 12

விடை: அ)6

14. இடுகுறி பொதுப்பெயருக்கு எடுத்துக்காட்டு?

அ) மரம் ஆ) தென்னைமரம் இ)வாழை மரம் ஈ)மாமரம்

விடை: அ) மரம்

15. அன்பினில் இன்பம் காண்போம்
அறத்தினில் நேர்மை காண்போம்- என்று தொடங்கும் பாடலை எழுதியவர் யார்?

அ)கவிமணி தேசியவிநாயகனார் ஆ)அழ.வள்ளியப்பா இ)கவிஞர் அறிவுமதி ஈ) மலேசியக் கவிஞர் முத்தரையனார்

விடை: ஈ) மலேசியக் கவிஞர் முத்தரையனார்

16. சிறந்த அறம் எது?

அ) அன்னதானம் செய்வது ஆ) முதியோர்களை பராமரிப்பது இ)மனதில் குற்றம் இல்லாமல் இருப்பது ஈ) தெய்வபக்தி உள்ளவனாக இருப்பது

விடை: இ)மனதில் குற்றம் இல்லாமல் இருப்பது

17. ஆசியஜோதி எந்த நுhலைத்தழுவி இயற்றப்பட்டது?

அ) தி பில்கிரிமேஜ் ஆ)லைட் ஆஃப் ஆசியா இ)லைட் பிரம் மெனி லேம்ப் ஈ)நாட் எனாப் ஒன் லைப்

விடை: ஆ)லைட் ஆஃப் ஆசியா

18. சமூகசேவைக்காக நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?

அ)அன்னை தெரேசா ஆ)மேரி கோம் இ)மாதா அமிர்தானந்தமயி ஈ)முத்துலெட்சுமி

விடை: அ)அன்னை தெரேசா

19. Transplanation- தமிழ்ப்படுத்துக?

அ) மடைமாற்றம் ஆ)உருமாற்றம் இ)உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஈ)மரம்நடுதல்

விடை: இ)உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை

20. ஒரு பொருளின் தன்மையை உள்ளது உள்ளபடி அழகுடன் கூறும் அணி எது?

அ)உயர்வு நவிற்சி அணி ஆ)தன்மை நவிற்சி அணி இ)இல்பொருள் உவமை அணி ஈ)தீவக அணி

விடை: ஆ)தன்மை நவிற்சி அணி

21. இந்திய வனமகன் என்று போற்றப்படுபவர் யார்?

அ)லியாண்டர் பயஸ் ஆ)சத்யார்த்தி கைலா இ)பிரக்னாநந்தா ஈ)ஜாதவ் பயேங்

விடை: ஈ)ஜாதவ் பயேங்

22. ‘ஐ’ காரம் சொல்லின் முதலில் வரும்போது எத்தனை மாத்திரை?

அ)1 1/2 ஆ)2 இ)1/2 ஈ)2

விடை: அ)1 1/2

23. ‘பொய்யாமொழி’ என்றழைக்கப்படும் நுhல் எது?

அ) தேவாரம் ஆ) திருக்குறள் இ) திருவாசனம் ஈ)புனித வேதாகமம்

விடை: ஆ) திருக்குறள்

24. போரவை கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய் யார்?

அ) நப்பசலையார் ஆ) இ)காவற்பெண்டு இ)வெண்ணிக்குயத்தியார் ஈ)ஔவையார்

விடை: இ)காவற்பெண்டு

25. பூட்டுங்கதவுகள் பிரித்து எழுதுக?

அ) பூட்டும் + கதவுகள் ஆ) பூட்டும்+ கதவுகள இ) பூட்டுங் + கதவுகள ஈ)பூட்டும் + கதவுகள்

விடை: ஈ)பூட்டும் + கதவுகள்

26. முத்துராமலிங்க தேவரை ” தேசியம் காத்த செம்மல்” என்ற பாராட்டியவர் யார்?

அ)ராஜாஜி ஆ)பெரியார் இ)திரு.வி.க ஈ)அண்ணா

விடை: இ)திரு.வி.க

27. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதியின் பெயர் என்ன?

அ)நீதிபதி பின்ஹே ஆ)சர் ஸ்டீபன் காப் இ)சர் ஜோசப் ஹேகன் ஈ)சர் ஸ்டீபன் மோரிஸ்

விடை: அ)நீதிபதி பின்ஹே

28. சொல்லின்செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?

அ) கி.வ. ஜகந்நாதன் ஆ) பத்திரிக்கையாளர் சோ இ)ரா.பி. சேதுப்பிள்ளை ஈ)வலம்புரி ஜான்

விடை: இ)ரா.பி. சேதுப்பிள்ளை

29. வாயில் என்பதை வாசல் என் வழங்குகிறோம் இதை இலக்கணப்படி எப்படி கூறலாம்?

அ)இலக்கண போலி ஆ)இடக்கரடக்கல் இ)மருஉ ஈ)இடைகுறை

விடை: இ)மருஉ

30. ஓவமாக்கள் என்பது யாரைக்குறிக்கும்?

அ) அரசவை அமைச்சர்கள் ஆ) போர்படை போர்வீரர்கள் இ)கற்றறிந்த சான்றோர்கள் ஈ)ஓவியம் வரைபவர்கள்

விடை: ஈ)ஓவியம் வரைபவர்கள்

31. கேலிச்சித்திரத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

அ)ராஜா ரவிவர்மா ஆ)பாரதியார் இ) சுப்பிரமணிய சிவா ஈ)சே.பிருந்தா

விடை: ஆ)பாரதியார்

32. தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகம் தோற்றுவிககப்பட்ட ஆண்டு?

அ) 1940 ஆ) 1960 இ)1981 ஈ)1990

விடை: இ)1981

33. விகுதி இல்லாமல் முதனிலை திரிந்து வழங்கும் தொழிறபெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

அ)தொழிற்பெயர் ஆ)விகுதி பெற்ற தொழிற்பெயர் இ)முதனிலைத் திரிந்நத தொழிற்பெயர் ஈ)விணையாலணையும் பெயர்

விடை: இ)முதனிலைத் திரிந்நத தொழிற்பெயர்

34. ……………….. தீமை உண்டாகும்?

ஆ)செய்ய வேண்டிய செயலை செய்வதால் ஆ) இ)செய்யத் தக்க செயலை செய்யாமல் இருப்பதால் இ)செய்ய வேண்டிய செயலை தள்ளிப்போடுவதால் ஈ)செய்ய வேண்டிய செயலை பிறறிடம் ஒப்படைப்பதால்

விடை: இ)செய்யத் தக்க செயலை செய்யாமல் இருப்பதால்

35. தன்குடியை சிறந்த குடியாக செய்ய விரும்புபவரிடம்………….. இருக்கக் கூடாது

அ)கோபம் ஆ)பொறாமை இ)சோம்பல் ஈ)பொய் பேசுதல்

விடை: இ)சோம்பல்

36. கடித இலக்கியத்தின் முன்னோடி யார்?

அ) அழகிரிசாமி ஆ) மு.வ. வரதராசனார் இ)அண்ணா ஈ)டி.கே. சிதம்பரனார்

விடை: ஈ)டி.கே. சிதம்பரனார்

37. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறும் அணி

அ) உருவக அணி ஆ) உவமை அணி இ)இல்பொருள் உவமை அணி ஈ)தீவக அணி

விடை: இ)இல்பொருள் உவமை அணி

38. அறநெறிச்சாரம் என்ற நுhலின் ஆசிரியர் யார்?

அ)காரியாசான் ஆ)முன்றுறை அரையனார் இ)முனைப்பாடியார் ஈ)ஔவையார்

விடை: இ)முனைப்பாடியார்

39. உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய் என்று கூறியயவர் யார்?

அ)வள்ளுவர் ஆ)கம்பர் இ)ஜீவானந்தம் ஈ)பாரதிதாசன்

விடை: ஈ)பாரதிதாசன்

40. இயேசு காவியம் என்னும் நுhலை இயற்றியவர் யார்?

அ)கவியரசர் கண்ணதாசன் ஆ)கவிப்பேரரசு வைரமுத்து இ)பா.விஜய் ஈ)மனுஷ்ய புத்ரன்

விடை: அ)கவியரசர் கண்ணதாசன்

41. காடர்கள் பேசும் மொழி…………..

அ)கோத்தா ஆ) கோரகா இ)தோடா ஈ)ஆல்அலப்பு

விடை: ஈ)ஆல்அலப்பு

42. செய்பவா கருவி, நிலம், செயல், காலம, செய்பொருள் ஆறும் வெளிப்படுமாறு வருவது?

அ) குறிப்பு வினையெச்சம் ஆ)தெரிநிலை பெயரெச்சம் இ)வினைமுற்று ஈ)தொழிற்பெயர்

விடை: ஆ)தெரிநிலை பெயரெச்சம்

43. உலக ஓசோன் நாள்?

அ) ஜனவரி 15 ஆ) பிப்ரவரி 20 இ)செப்டம்பர் 16 ஈ) மே 18

விடை: இ)செப்டம்பர் 1

44. அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?

அ) 4 ஆ) 3 இ)2 ஈ)9

விடை: அ) 4

45. நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது?

அ)25 ஆ) 15 இ)4 ஈ)10

விடை: ஈ)10

46. ரங்கராஜன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ) சுரதா ஆ)கல்யாண்ஜி இ)இன்குலாப் ஈ)சுஜாதா

விடை: ஈ)சுஜாதா

47. பேரியாழ் எத்தனை நரம்புகளைக் கொண்டது?

அ) 12 ஆ) 20 இ)19 ஈ)14

விடை: இ)19

48. ஓன்றுக்கு மேற்பட்ட சொற்களில் ‘உம்’ என்னும் உருபு வெளிப்பட வருவது ……………எனப்படும்

அ)எண்ணும்மை ஆ)உம்மைத்தொகை இ)முற்றும்மை ஈ)உவமைத்தொகை

விடை: அ)எண்ணும்மை

49. அரசரை அவரது ……………… காப்பாற்றும்

அ) படைபலம் ஆ) பெருவீரம் இ)அண்டைநாடுகளின் ஆதரவு ஈ)குற்றமற்ற ஆட்சி

விடை: ஈ)குற்றமற்ற ஆட்சி

50. தகடுர் என்றழைக்கப்பட்ட ஊர் எது?

அ)தஞ்சை ஆ)கோவை இ)குடந்தை ஈ)தருமபுரி

விடை: ஈ)தருமபு

51. ‘பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்” என்னும் நுhலின் பதிப்பாசிரியர் யார்?

அ)மீரா ஆ)இறையரசன் இ)அ.கௌரன் ஈ)சு.சமுத்திரம்

விடை: இ)அ.கௌரன்

52. சேரர்களின் நாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?

அ)சேரநாடு ஆ)மலைநாடு இ)குடநாடு ஈ)கொங்குநாடு

விடை: இ)குடநாடு

53. தென்னிந்திய சமூக சீர்த்திருத்தத்தின் தந்தை யார்?

அ) அம்பேத்கார் ஆ) ப.ஜிவானந்தம் இ)பெரியார் ஈ)அயோத்திதாசர்

விடை: ஈ)அயோத்திதாசர்

54. சிறுகதை மன்னன் என்று போற்றபபடும் புதுமைபித்தனின் இயற்பெயர் என்ன?

அ)சீவலமாறன் ஆ)ராமலிங்கம் இ) சொ.விருத்தாச்சலம் ஈ)ரங்கராஜன்

விடை: இ) சொ.விருத்தாச்சலம்

55. பா வகைகள் எத்தனை வகைப்படும்?

அ) 4 ஆ) 5 இ)8 ஈ)6

விடை: அ) 4

56. ஆண்மையின் கூர்மை ………….

அ)பெருவீரம் வெளிப்படுத்துதல் ஆ)பெரும் கொடை கொடுத்தல் இ)நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல் ஈ) பகைவருக்கு உதவுதல்

விடை: ஈ) பகைவருக்கு உதவுத

57. இறையரசனின் இயற்பெயர் என்ன?

அ) கருப்பு காந்தி ஆ) சிவஞானி இ)சே.சேசுராசா

விடை: இ)சே.சேசுராசா

58. மு.மேத்தா எந்நுhலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

அ) அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ஆ)புதிய உரைநடை இ)ஆகாயத்துக்கு அடுத்த வீடு ஈ)வணக்கம் வள்ளுவ

விடை: இ)ஆகாயத்துக்கு அடுத்த வீடு

59. அச்சில் வெளிவந்த அம்பேத்காரின் முதல் புத்தகம் எது?

அ) எனது போராட்டம் ஆ)கள்ளிக்காட்டு இதிகாசம் இ)இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஈ)இந்திய தேசிய பொருளாதார பங்கு வீதம்

விடை: இ)இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

60. இராஜலட்சமி என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)சே.பிருந்தா ஆ) மீரா இ)கோமகள் ஈ)ராஜம் கிருஷ்ணன்

விடை: இ)கோமகள்

61. வாழை + மரம் இந்த புணர்ச்சி எந்தவகைப் புணர்ச்சி?

அ) உயிர்முதல் புணர்ச்சி ஆ)மெய்முதல் புணர்ச்சி இ)உயிரீற்றுப் புணர்ச்சி ஈ)மெய்யீற்றுப் புணர்ச்சி

விடை: ஆ)மெய்முதல் புணர்ச்சி

62. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் – குறளில் பயின்றுவரும் அணி எது?

அ) உவமை அணி ஆ) உருவக அணி இ)ஏகதேச உருவக அணி ஈ)வேற்றுமை அணி

விடை: இ)ஏகதேச உருவக அணி

63. இந்திய தேசிய இராணுவத்தில் வான்படை பயிற்சி பெற்ற 45 பேர் கொண்ட குழுவின் பெயர் என்ன?

அ)டோக்கியோ கேடட்ஸ் ஆ) ஆஃப்ரேசன் புளு ஸ்டார் இ)ப்ளீட்ஸ் க்ரீக் ஈ)கொரில்லா படை

விடை: அ)டோக்கியோ கேடட்ஸ்

64. நரி விருத்தம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

அ)ஒட்டக் கூத்தர் ஆ)ஜெயங்கொண்டார் இ)திருத்தக்கதேவர் ஈ)போகர்

விடை: இ)திருத்தக்கதேவர்

65. முத்தொள்ளாயிரத்தில் சோழநாடு எவ்வாறு சிறப்பிக்கப்பபடுகிறது?

அ)புண்ணியபூமி ஆ)முத்துடைநாடு இ)அச்சமில்லாத நாடு ஈ)ஏர்க்களச்சிறப்பு போர்களச்சிறப்பு

விடை: ஈ)ஏர்க்களச்சிறப்பு போர்களச்சிறப்பு

66. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளைக் கொண்டது?

அ) 103 ஆ) 582 இ)782 ஈ)400

விடை: இ)782

67. ஆகுபெயர்கள் எத்தனை வகைப்படும்?

அ) 16 ஆ) 15 இ) 18 ஈ)8

விடை: அ) 16

68. ஈ.வெ.ரா. வுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?

அ)1938, நவம்பர் 13 ஆ)1920 நவம்பர் 15 இ)1900 அக்டோபர் 20 ஈ)1890 டிசம்பர் 5

விடை: அ)1938, நவம்பர் 13

69. தெற்காசியாவின் சாக்ரடிஸ் என்றழைக்கப்படுபவர் யார்?

அ) பெரியார் ஆ) அம்பேத்கார் இ) அயோத்திதாசர் ஈ)ப.ஜீவானந்தம்

விடை: அ) பெரியார்

70. புதுக்கவிதைகளின் தந்தை யார்?

அ)பாரதியார் ஆ) மு.மேத்தா இ) தமிழன்பன் ஈ)நா.பிச்சமுர்த்தி

விடை: ஈ)நா.பிச்சமுர்த்தி

71. யாருடைய காலகட்டம் சீனசிந்தனையின்பொற்காலமாக கொண்டாடப்படுகிறது?

அ)போதிதர்மர் ஆ) தாங் வம்சம் இ)ஹான் வம்சம் ஈ)லாவோட்சு

விடை: ஈ)லாவோட்சு

72. யசோதரகாவியம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது?

அ) 5 ஆ) 8 இ) 10 ஈ)20

விடை: அ) 5

73. அடிகள் எத்தனை வகைப்படும்?

அ) 5 ஆ) 4 இ) 8 ஈ)3

விடை: அ) 5

74. தொடை எத்தனை வகைப்படும்?

அ)6 ஆ) 7 இ) 5 ஈ)8

விடை: ஈ)8

75. ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகவியல் மேதை யார்?

அ) ரூஸோ ஆ)வால்டேர் இ)பிளேட்டோ ஈ)ஆல்பர் சுவைட்சர்

விடை : ஈ)ஆல்பர் சுவைட்ச

76. கல்யாண்ஜியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?

அ) குறிஞ்சி மலர் ஆ)தமிழின்பம் இ)ஒரு சிறு இசை ஈ)இதனால் சகலமானவர்களுக்கும்

விடை: இ)ஒரு சிறு இசை

77. குறுந்தொகையின் அடி வரையறை?

அ) 4-12 ஆ)9-13 இ) 4-8 ஈ)3-6

விடை: இ) 4-8

78. சு.சமுத்திரம் எந்நுலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெறறார்?

அ)வைகறை மேகங்கள் ஆ) வால்காவிலிருந்து கங்கை வரை இ) பெய்யென பெய்யும் மழை ஈ)வேரில் பழுத்த பலா

விடை: ஈ)வேரில் பழுத்த பலா

79. புகழ்வது போல இகழ்வதும் இகழ்வது போல புகழ்வதும் வருவது எந்த அணி?

அ) உவமை அணி ஆ) உருவக அணி இ)வஞ்சப் புகழ்ச்சி அணி ஈ)வேற்றுமை அணி

விடை: இ)வஞ்சப் புகழ்ச்சி அணி

80. சிற்பியின் மகள் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) கோமகள் ஆ) ஆண்டாள் இ)பூவண்ணன் ஈ)மா.நன்னன்

விடை: இ)பூவண்ணன்

81. முகமதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)காயிதே மில்லத் ஆ)உமறுபுலவர் இ)குணங்குடி மஸ்தான் சாகிபு ஈ)நாகூர்ரூமி

விடை: ஈ)நாகூர்ரூமி

82. இஸ்மத் சந்நியாசி என்றழைக்கப்பட்டவர் யார்?

அ)தவத்திரு குன்றங்குடி அடிகளார் ஆ)கிருபானந்த வாரியார் இ)ஜெயேந்திரர் ஈ)வீரமாமுனிவர்

விடை: ஈ)வீரமாமுனிவர்

83. கரிசல் எழுத்தாளர்களின் வரிசையில் மூத்தவர் யார்?

அ)கி.ராஜநாராயணன் ஆ) ப.ஜெயப்பிரகாசம் இ)சோ.தர்மன் ஈ)அழகிரிசாமி

விடை: ஈ)அழகிரிசாமி

84. செய்யுளில் ஓரிடத்தில் நின்ற சொல் அச்செய்யுளில்பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருள் தருவது?

அ) உவமை அணி ஆ) உருவக அணி இ)தீவக அணி ஈ)வேற்றுமை அணி

விடை: இ)தீவக அணி

85. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் நூலை எழுதியவர் யார்?

அ)நா.முருகேச பாண்டியன் ஆ)கபிலர் இ)ஔவையார் ஈ)கலைஞர் கருணாநிதி

விடை: அ)நா.முருகேச பாண்டியன்

86. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எந்நூல் தமிழுக்கு கருவூலமாய் விளங்கியது?

அ)நூறாசிரியம் ஆ)பாவியக்கொத்து இ)கொய்யாக்கனி ஈ)திருக்குறள் மெய்ப்பொருளுரை

விடை: கமெண்ட் பண்ணவும்

87. கரும்பின் நுனிப்பகுதியை எவ்வாறு குறிக்கலாம்?

அ) அடி ஆ)கழை இ)கொழுந்து ஈ)கொழுந்தாடை

விடை: ஈ)கொழுந்தாடை

88. தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

அ)ரங்கராஜன் ஆ) முத்தையா இ)சண்முக சுந்தரம் ஈ)துரை.மாணிக்கம்

விடை: இ)சண்முக சுந்தரம்

89. திருவள்ளுவர் என்ற பெயரில் முதல் தமிழ்கணிணி தயாரித்த தனியார் நிறுவனம்?

அ)டி.சி.எம் டேட்டா புரோடெக்ட்ஸ் ஆ)டோக்கியோ கேடட்ஸ் இ)டீப் புளு ஈ)ஐ.பி.எம்

விடை: அ)டி.சி.எம் டேட்டா புரோடெக்ட்ஸ்

90. மா.ராமலிங்கம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)காளமேகப்புலவர் ஆ) அதிவீரராம பாண்டியர் இ) எழில்முதல்வன் ஈ)சுரதா

விடை: இ) எழில்முதல்வன்

91. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ?

அ)தொழிற்பெயர் ஆ) விகுதிபெற்ற தொழிற்பெயர் இ)விணையாலணையும் பெயர் ஈ)முதனிலைத் தொழிற்பெயர்

விடை: ஆ) விகுதிபெற்ற தொழிற்பெயர்

92. உலக காற்றாலை உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம்?

அ) 5 ஆ)3 இ) 2 ஈ)1

விடை: அ) 5

93. முல்லைப்பாட்டு எந்தவகைப் பாவகையால் ஆனது?

அ) விருத்தப்பா ஆ) கலிப்பா இ) வெண்பா ஈ)ஆசிரியப்பா

விடை: ஈ)ஆசிரியப்பா

94. புலம்பெயர் தமிழர்களைப்பற்றிய முதல் புதினம்?

அ) குறிஞ்சிமலர் ஆ) புயலிலே ஒரு தோணி இ)ஆறாம் திணை ஈ)இதனால் சகலமானவர்களுக்கும்

விடை: ஆ) புயலிலே ஒரு தோணி

95. தொகைநிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும்?

அ) 6 ஆ)3 இ) 2 ஈ)1

விடை: அ) 6

96. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று கூறும் நூல்?

அ) குறுந்தொகை ஆ)புறநானூறு இ)நற்றிணை ஈ)கலித்தொகை

விடை: இ)நற்றிணை

97. அதிவீரராம பாண்டியரின் இயற்பெயர் என்ன?

அ)சொ.விருத்தாசலம் ஆ)ரங்கராஜன் இ)முகமது ரஃபி ஈ)சீவலமாறன்

விடை: ஈ)சீவலமாற

98. மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் யார்?

அ) நக்கீரர் ஆ)பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் இ)மதுரை இளநாகனார் ஈ)முடத்தாம கண்ணியார்

விடை:

99. கோபல்லபுரத்து மக்கள் புதினம் எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது?

அ) 1991 ஆ)31945 இ) 1854 ஈ)1995

விடை: அ) 1991

100. தொகாநிலைத் தொடர்க்ள எத்தனை வகைப்படும்?

    அ) 9 ஆ)3 இ) 2 ஈ)1

    விடை: அ) 9

    6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1

    PRINTOUT 50 PAISE LOW COST
    PRINTOUT 50 PAISE LOW COST

    இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 2 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!


    🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


    📂 பி.டி.எப் தொகுப்புகள்:

    🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

    TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH
    TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH
    BHARANI DARAN
    BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
    👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -