HomeBlogகேங்மேன் பணி தொடர்பான வழக்கில் சுமுகமான தீர்வு ஏற்பட்டால் 10 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்படும்
- Advertisment -

கேங்மேன் பணி தொடர்பான வழக்கில் சுமுகமான தீர்வு ஏற்பட்டால் 10 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்படும்

 

10 thousand people will be given jobs if there is a smooth settlement in the case related to gangman work

கேங்மேன் பணி
தொடர்பான வழக்கில் சுமுகமான
தீர்வு ஏற்பட்டால் 10 ஆயிரம்
பேருக்கு பணி வழங்கப்படும்

மின்
வாரியத்தில் உள்ள கேங்மேன்
பணி தொடர்பான வழக்கில்
சுமுகமான தீர்வு ஏற்பட்டால் 10 ஆயிரம் பேருக்கு பணி
வழங்கப்படும் என
மின்சாரத்துறை அமைச்சர்
தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல்
மாவட்டத்திற்கு அருகில்
உள்ள புதுசத்திரம் ஒன்றியத்தில் மினி கிளினிக்கை அமைச்சர்
தங்கமணி திறந்து வைத்தார்.

அப்போது
பேசிய அவர் கூறியதாவது:

நாமக்கல்
மாவட்டத்தில் மொத்தம்
53
மினி கிளினிக்கள், 6 நடமாடும்
கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவைகளில் இதுவரை
18
கிளினிக்குகள் திறந்து
வைக்கப்பட்டுள்ளன. கொல்லிமலை
பகுதிகளிலும் மினி
கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன.

மேலும்
மின்சார வாரியத்தில் உள்ள
கேங்மேன் பணிக்கான வழக்கு
நடைபெற்று வருகிறது. இதற்காக
3
நாட்களுக்கு முன் அனைத்து
தொழிற்சங்கங்களை அழைத்து
பேசினோம். இது 10 ஆயிரம்
குடும்பத்தின் நிலைமை.
எனவே அவர்களை கருத்தில்
கொண்டு கருணை அடிப்படையில் அந்த வழக்கை வாபஸ்
பெற வேண்டும்.

அடுத்த
வழக்கு விசாரணை வரும்போது
இதுகுறித்த மனுவை தாக்கல்
செய்ய உள்ளனர். இந்த
வழக்கு குறித்து சுமுகமான
முடிவு வந்தால் விரையில்
10
ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -